சூப்பர் ஹிட்டான சங்கர் படம்.. அந்த படத்தில் மாதுரி தீட்சித் நடிக்க வேண்டியது

by Rohini |   ( Updated:2025-04-26 03:21:18  )
shankar
X

shankar

Shankar: ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சங்கர். அதற்கு முன்பு வரை எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார் .ஆரம்பத்தில் ஒரு சில துணை கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார் சங்கர். ஜென்டில்மேன் படம் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையே கொண்டாட வைத்த திரைப்படமாக மாறியது.

முதல் படமே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுவரை தமிழ் சினிமாவின் போக்கு கிளாசிக் கமர்சியல் என்றிருந்த நிலையில் ஒரு வித்தியாசமான ஜானரை நோக்கி சினிமாவை பயணிக்க வைத்தார் ஷங்கர். அதனைத் தொடர்ந்து காதலன் திரைப்படத்தை எடுத்தார். அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய வசந்த பாலன் காதலன் திரைப்படத்தில் நடந்த சில சம்பவத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

முதலில் காதலன் திரைப்படத்தில் நடிக்க இருந்தது பிரசாந்த் என கூறினார். அதற்கு முன்பு வரை பிரபுதேவா பல படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி வந்தார். ஒரு பாடல் என்றாலும் அந்தப் பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. இப்படி ஒரே ஒரு பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் பிரபுதேவா. அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் இந்து திரைப்படம்.

அந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் பிரபுதேவா அவருடைய நடனம் என ரசிகர்களின் பார்வை அவரிடம் அதிகமாக திரும்பியது. அதனால் காதலன் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசை பிரபுதேவாவின் நடிப்பு நடனம் என அது ஒரு பேக்கேஜாக படத்திற்கு அதனுடைய வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும் என நினைத்து தான் பிரபுதேவாவை இந்த படத்தில் போட்டார்களாம்.

அதற்கு ஏற்ப நக்மா. ஆனால் முதலில் இந்தப் படத்தில் மாதுரி தீட்சித்தான் நடிக்க வேண்டி இருந்ததாம். ஆனால் அப்போது கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை. நக்மா தான் நடித்தார் என வசந்த பாலன் கூறினார். அடுத்து வடிவேலு காமெடி. கிழக்கு சீமையிலே திரைப்படம் வரை வடிவேலுவின் காமெடி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால் அவரும் பிரபுதேவாவும் இணைந்து இந்த படத்தில் ஒரு கலக்கு கலக்கியிருப்பார்கள். ஒவ்வொரு பாடலுமே ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. முதன் முதலில் ஊர்வசி பாடலை தான் படமாக்கினோம். அந்தப் பாடலை படமாக்கியதுமே இந்த படம் எங்கேயோ போகப் போகிறது என்று நினைத்தோம். அதையும் மீறி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது என வசந்த பாலன் கூறினார்.

Next Story