எதிர்பாராததை எதிர்பாருங்கள்! லியோவில் சஸ்பென்சாகவே இருந்த அந்த பிரபலம் - இவரிடம் இப்படியொரு அவுட்புட்டா?

Leo : விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க கூடவே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இசையில் அன்பறிவு சண்டைக் காட்சிகளில் படம் மாஸ் கிளப்பி வருவதாகவும் சொல்லப்படுகிறது. படம் பார்த்த அனைவரும் கலவையான விமர்சனங்களை சொல்லிவருகிறார்கள்.

இதையும் படிங்க: ரெட் லைட் வெளிச்சத்துல சும்மா அள்ளுது!. பாதி மறைச்சி மீதியை காட்டும் தமன்னா!…

இன்னும் ஓரிரு நாள்களில் லியோ படத்தின் வரவேற்பு மற்றும் வசூல் நிலவரங்கள் தெளிவாக தெரியும். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக லியோ படத்திற்கு பெரிய ஹைப் இருந்த நிலையில் அந்தளவு எதிர்பார்ப்பு இருந்திருக்க வேண்டாமே என ஒரு சில ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

இந்திய சினிமாவில் இருக்கும் முக்கிய பிரபலங்களை இந்தப் படத்தில் போட்டு அவர்களுக்கு உண்டான காட்சிகளில் லோகேஷ் கோட்டை தவறிவிட்டார் என்றும் கூறிவருகிறார்கள். இதில் முக்கியமாக அனுரக் காஷ்யப். இவர் இந்திய சினிமாவிலேயே போற்றப்படும் ஒரு நடிகராக இயக்குனராக அறியப்படுபவர்.

இதையும் படிங்க: கமலை நாயகனாக மாத்துவது இனி உங்கள் பொறுப்பு… பாலசந்தரிடம் சேர்த்து விட்ட பிரபல நடிகர்..!

ஆனால் லியோ படத்தில் ஒரே ஒரு சீனில் காட்டி அவரையும் சுட்டு விடுகின்றனர். அதே போல் 30 நாள் இந்தப் படத்தில் நடித்ததாக சொல்லப்படும் மன்சூர் அலிகானின் கதாபாத்திரமும் கொஞ்ச நேரம்தான் காட்டப்படுகிறது. ஆனால் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் மன்சூர்.

ஆனால் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் இனிமேல் இயக்கும் வேலையை விட்டுவிட்டு பேசாமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தலாம். அந்தளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இத போய் அஜித்கிட்ட காப்பி… அதுவும் விஜய்..! உருட்டலாம்… அதுக்குனு இப்டியா? லியோ பீதியோ..!

படத்தில் மெயின் வில்லனாக சஞ்சய் தத்தை கூறினார்கள். ஆனால் அந்த பொறுப்பை ஆக்‌ஷன் கிங்தான் எடுத்திருக்கிறார். எதிர்பார்த்த சில விஷயங்கள் எல்லாம் ஏமாற்றமாகவே இருக்கின்றன என கோடம்பாக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் லியோ படத்தில் இதுவரை பேசப்படாத கேரக்டராக இருந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவரை ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரமாகவே வைத்திருந்தார்கள். கொஞ்ச நேரம் இந்தப் படத்தில் நடித்தாலும் படம் முடிந்து வெளியே வரும் வரை அவருடைய கதாபாத்திரம் நம் மனதில் பதியும் படி செய்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

 

Related Articles

Next Story