சுஹாசினியை சீண்டிய ரவுடிகள்! ரியல் ஹீரோவாக மாறிய மோகன்.. லவ்வர் பாய்க்குள் இப்படி ஒரு ஹீரோயிசமா?

Actor Mohan:தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் ஒரு லவ்வர் பாயாக இருந்து வந்தவர் நடிகர் மோகன். கோகிலா என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த மோகன் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து ஏகப்பட்ட வெள்ளி விழா படங்களை கொடுத்து மக்கள் மனதில் இன்று வரை ஒரு நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஹரா, நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் இது, அதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஹரா திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மை.

இதையும் படிங்க: நான் வெறும் குதிரை!.. எனக்கு மரியாதையே இல்ல!.. ரசிகர்களிடம் அன்றே சொன்ன ரஜினி!…

மரத்தின் பின்னாடி குழல் ஊதி கொண்டு இருக்கும் ஒரு ஹீரோவாக மைக்கை பிடித்துக் கொண்டு இருக்கும் ஒரு ஹீரோவாகவே தான் மோகனை ரசிகர்கள் ரசித்து வந்தார்கள். ஆனால் திடீரென துப்பாக்கி எடுத்து சுடும் மோகனை ஏனோ காரணத்தால் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் கோட் படத்தில் வில்லனாக புது அவதாரம் எடுத்திருக்கிறார் மோகன் .

இந்த நிலையில் சில தினங்களாக மோகனின் பல பேட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் சுஹாசினியும் மோகனும் பேசிக்கொண்ட ஒரு சம்பவம் இணையத்தில் தீயாய் பரவுகின்றது. மோகனும் சுஹாசினியும் இணைந்து கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதில் அருக்காணி என்ற கதாபாத்திரத்தில் சுகாசினி நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருந்தார் .

இதையும் படிங்க: நண்பர்தான் போஸ் கொடுப்பாரா? விண்டேஜ் லுக்கில் வைரலாகும் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம்

படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் படமாக்கிக் கொண்டிருந்தபோது அந்த ஒரு படத்தில் வரும் காட்சி. அதாவது ஒரு பொலிட்டிக்கல் கூட்டம் நடக்கும் வேளையில் அந்தக் கூட்டத்தில் சுஹாசினி தன்னுடைய செருப்பை தேடுவது போன்ற ஒரு காட்சி. அப்போது உண்மையாகவே சில ரௌடிகள் உள்ளே புகுந்து கிண்டல் செய்து கொண்டிருந்தார்களாம்.

அப்போது திடீரென மோகன் கோபத்தில் அந்த ரவுடிகளிடம் சண்டை போட்டு சுஹாசினியை பத்திரமாக காப்பாற்றி இருக்கிறார். இதைக் குறித்து அந்த பேட்டியில் கூறும்போது என் சினிமா வாழ்க்கையில் நான் பார்த்த ஒரு ரியல் ஹீரோ நீதான் மோகன். அதுவரை நான் வேறு எந்த நடிகரிடமும் பார்க்கவில்லை. ஒரு லவ்வர் பாய்க்குள் இப்படி ஒரு ஹீரோ இருப்பதை அன்று தான் நான் பார்த்தேன் என சுஹாசினி மோகனைப் பார்த்து கூறினார்.

இதையும் படிங்க: பிரேம்ஜி காதலில் நடந்த பிரச்சினை! ரகசிய திருமணத்திற்கு இதுதான் காரணமா? பிரபலம் சொன்ன தகவல்

 

Related Articles

Next Story