கேப்டன் குடும்பம் போட்ட கண்டீசன்! உஷாரான விஜய்.. பதறி ஓடிய விஜய் ஆண்டனி

Mazhai Pidikkatha Manithan: ரஜினி கமல் இவர்கள் உச்சத்தில் இருந்த காலத்திலேயே மிகவும் புகழ் பெற்றிருந்தவர் கேப்டன் விஜயகாந்த். சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களைக் கொண்ட விஜயகாந்த் அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்து வந்தார். ரஜினி கமல் படங்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இவருடைய படங்களும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றனர. அந்த அளவுக்கு சாமானிய மக்களின் நாயகனாக இருந்தார் கேப்டன்.

இவருடைய இழப்பு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் நடிக்கும் படத்தில் கேப்டனின் ஏஐ தொழில் நுட்பத்தால் அவரை மறுபடியும் கொண்டு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஐடியாவை முதலில் பயன்படுத்த இருந்தவர் விஜய் ஆண்டனி. மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன்.

இதையும் படிங்க: என்னவொரு முரட்டுத்தனம்!.. மேடையிலேயே அஞ்சலி மேல கையை வச்ச பாலய்யா!.. ஷாக்கிங் வீடியோ!..

இந்த படம் முழுவதும் விஜயகாந்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திரைப்படம் என இருந்த நிலையில் இந்த படத்தில் அவரை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைக்க வேண்டும் என மில்டன் உறுதியாக இருந்தாராம் .2021 கொரோனா காலகட்டம் என்பதால் அந்த நேரத்தில் படத்தை சரிவர எடுக்க முடியாமல் போயிருக்கிறது. அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து கேப்டனை நடிக்க வைக்க கேப்டன் குடும்பத்திடம் போய் கேட்டிருக்கிறார்கள்.

அவருக்கு அப்போது உடல்நிலை கொஞ்சம் சரியாக இல்லாத காரணத்தால் முதலில் அவர் குடும்பம் வேண்டாம் என தட்டிக் கணித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு இரண்டு மணி நேரம் அவர் நடித்தால் நன்றாக இருக்கும். க்ளோசபில் அவரை வைத்து எடுத்து விடுகிறேன் என சொல்லி இருக்கிறார் .அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறது கேப்டன் குடும்பம்.

இதையும் படிங்க: நாங்க ரெண்டு பேரும் அதுல கில்லாடி! ‘தக்லைஃப்’ படத்தில் சம்பவம் செய்யப் போகும் கமல், சிம்பு

இருந்தாலும் அந்த படத்தை ஆரம்பிப்பதில் கொஞ்சம் தாமதமானதால் கேப்டனின் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது. சிறிது நாட்கள் கழித்து அவர் இறந்தும் போக அவரை இந்த படத்தில் கொண்டுவர வேண்டும் என உறுதியாக இருந்தாராம் மில்டன். அதனால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரை இந்த படத்திற்குள் கொண்டு வரலாம் என பிரேமலதாவிடம் போய் கேட்டிருக்கிறார்கள்.

அப்போது பிரேமலதா தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என கண்டீசன் போட்டிருக்கிறார். ஆனால் மில்டன் தரப்பில் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அந்த நினைப்பை அப்படியே விட்டு விட்டாராம். அதன் பிறகு அந்த கேரக்டரில் இப்போது சத்யராஜ் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. சத்யராஜ் இந்த படத்திற்குள் வந்த பிறகு அந்த கேரக்டரை இன்னும் டெவலப் செய்து சத்யராஜ் கே ஸ்டைலில் மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இந்த தகவலை தெரிவித்தார்.

இதையும் படிங்க: நம்ம பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினியா இது?!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்குறாரே!..

கடைசியில் விஜயகாந்தின் ஏஐ விஜய் நடிக்கும் கோட் படத்தில்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிரேமலதா சொன்னதை போல் கோட் படத்தில் விஜய்காந்தின் காட்சிகள் நிச்சயமாக பெரிய அளவில் பேசப்படும் என்றுதான் சொல்லி வருகிறார்கள்.

 

Related Articles

Next Story