அஜித்துக்கும் ஹீராவுக்கும் இடையில் காதலா? யார் சொன்னா? இவர்கிட்ட கேளுங்கப்பா உண்மைய?

heera
Ajith Heera: சமீபகாலமாக அஜித் பற்றிய பல விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன. அவருக்கும் ஹீராவுக்கும் இருந்த நெருக்கம் , காதல் என பல விஷயங்கள் இப்போது பூதாகரமாக கிளம்பியிருக்கிறது. என்னதான் ஒரு மனிதன் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்த கால வாழ்க்கை என்பது நிச்சயமாக இருக்கும். ஆனால் அதையே ஆயுதமாக வைத்து அந்த மனிதனின் புகழை கெடுக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் பலபேரின் ஆதங்கமாக இருக்கிறது.
அப்படித்தான் அஜித் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. காதல் கோட்டை படத்தின் போது முதன் முதலில் அஜித்தும் ஹீராவும் இணைந்தனர். அந்த படத்திற்கு பிறகேதான் அவர்களுக்கு இடையில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு இருவரும் வெளியில் ஒன்றாக சுற்றுவது, ஹீராவுக்கு அஜித் ஒரு கெஸ்ட் ஹவுஸ் வாங்கிக் கொடுத்தது என அப்போதைய காலகட்டத்தில் ஒரு கிசுகிசு எழுந்தது.
காதல் கோட்டை படத்திற்கு பிறகு மீண்டும் தொடரும் படத்தில் அஜித்தும் ஹீராவும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை. ஆனால் அஜித் தன்னை ஏமாற்றிவிட்டார், அவர் ஒரு நல்ல மனிதரே கிடையாது என சமீபத்தில் ஹீராவின் வலைதள பக்கத்தில் இருந்து ஒரு செய்தி வெளியானது. அதை திறந்து பார்த்தால் அந்த வலைதள பக்கம் செயலிழந்து கிடக்கிறது.
அதனால் இது ஹீராவே இந்த செய்தியை வெளியிட்டாரா? அல்லது ஏதும் ஐடி விங் இந்த மாதிரி செயலில் ஈடுபடுகிறதா என்று சந்தேகத்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித்துடன் தொடர்ந்து அட்டகாசம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், நீ வருவாய் என, உன்னைக் கொடு என்னைத்தருவேன், வீரம், போன்ற படங்களில் நடித்த ரமேஷ் கண்ணா இதை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அஜித்துடன் தொடர்ந்து நண்பராக அதிக படங்களில் ரமேஷ் கண்ணாதான் நடித்திருக்கிறார். அவர் அஜித்துக்கும் ஹீராவுக்கும் இடையில் காதல் இருந்ததா என்பதை பற்றி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அவரிடம் கேட்ட போது ‘அப்படியெல்லாம் கிடையாது. அஜித் அப்படிப்பட்டவரும் இல்லை. ஹீராவுடன் காதல் என்றால் எப்படி ஷாலினியை திருமணம் செய்திருப்பார்? சினிமாக்காரங்க என்றாலே ஏதாவது எழுதத்தான் செய்வாங்க. அப்படித்தான் இதுவும்’ என ரமேஷ் கண்ணா கூறினார்.