நிஜமாவே சிம்புவுக்கும் ஜெயம் ரவிக்கும் பிரச்சினையா? பொன்னியின் செல்வனை அடுத்து சூடுபிடிக்கும் தக் லைஃப்

Published on: March 28, 2024
jayam
---Advertisement---

Thug Life: கமல் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் தக் லைஃப். மணிரத்தினம் இயக்கத்தில் 34 வருடங்கள் கழித்து மீண்டும் கமல் நடிக்கப் போகும் திரைப்படம்தான் தக் லைஃப். இதற்கு முன் நாயகன் என்ற ஒரு மும்பை தாதா கதையை அடிப்படையாக வைத்து கமல் நடிக்க அந்தப் படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. இப்போது அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் படத்தில் முதலில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்தது. ஆனால் முதலில் துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்தப் படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. அவரை அடுத்து இப்போது ஜெயம் ரவியும் இந்தப் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. இப்போது அவர்களுக்கு பதிலாக சிம்பு இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: அதுக்கு இத்தனை வீடியோவா? பிசினஸை தூக்கி நிறுத்தி அஜித் போட்ட சிம்பிள் ப்ளான்!…

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்திலும் சிம்பு நடித்தால் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று ஜெயம் ரவி சொன்னதாக ஒரு பேச்சு வெளியானது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்தார் ஜெயம் ரவி. ஆனால் இந்த தக் லைஃப் படத்திலும் சிம்பு உள்ளே வந்த பிறகுதான் ஜெயம் ரவி வெளியேறுகிறார். அதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வலைப்பேச்சு அந்தனன் ‘சிம்புவுக்கும் மணிரத்தினத்திற்கும் இடையே ஒரு ஆழமான அன்பு இருக்கிறது. சிம்புவின் கெரியர் கேள்விக் குறியாக இருந்த நேரத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தை எடுத்து சிம்புவுக்கு மறு வாழ்வு கொடுத்தவர் மணிரத்தினம். அந்த நேரத்தில் சிம்பு ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வர மாட்டார் என்ற ஒரு பேச்சு இருந்தது.’

இதையும் படிங்க: சைனிங் உடம்ப பார்த்தா ஜிவ்வுன்னு ஏறுது!.. பெட்ரூமில் கிளுகிளுப்பு காட்டும் துஷரா விஜயன்!..

‘ஆனால் மணிரத்தினம் நேராக அவரே காரை எடுத்துப் போய் சிம்புவின் வீட்டில் நிறுத்துவாராம். உடனே சிம்பு ஓடி வருவாராம். அதிலிருந்தே சிம்பு தன் நடத்தையை மாற்றிக் கொண்டார்’ என வலைப்பேச்சு அந்தனன் கூறினார். அந்த ஒரு காரணத்திற்காக தக் லைஃப் படத்திலும் சிம்புவை இணைத்திருப்பார் மணிரத்தினம் என அந்தனன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.