More
Categories: Cinema News latest news

இந்த விஷயத்தில் நயன்தாராவையே மிஞ்சிய ராஷ்மிகா மந்தனா.!

தென்னிந்திய திரையுலகின் மு ன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய புஷ்பா படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி உள்ள நிலையில், இவர் அந்த படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

Advertising
Advertising

அதன்படி புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு மட்டும் ராஷ்மிகா மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அதே தொகையை தான் பெறப்போவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகியதும் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ராஷ்மிகா தான் இருக்கிறார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு படத்திற்கு 4 கோடி வரை சம்பளம் கேட்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் ராஷ்மிகா அதே அளவிற்கு சம்பளம் வாங்குவதால் நயன்தாராவை விட ரஷ்மிகா அதிகமாக சம்பளம் வாங்குவாரோ என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.

Published by
Manikandan

Recent Posts