வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூன்று படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு. அதில் முதல் படமாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் உருவானது. அடுத்து, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குனர் கோகுலின் இயக்கத்தில் கொரோனா குமாரு என்கிற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு. ஆனால் என்ன காரணமோ நடிக்கவில்லை. இந்த படத்திற்காக சில கோடி செலவு செய்து போடப்பட்ட செட் வீணாய்ப்போனது. அதன்பின் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கவில்லை.
தனது நிறுவனத்துக்கு நடித்துக் கொடுக்கும்படி ஐசரி கணேஷ் கேட்டும் சிம்பு கண்டுகொள்ளவில்லை.. அதோடு வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி தரவில்லை. இதையடுத்து ஐசரி கணேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றத்தில் வாங்கியதை விட குறைவான தொகையை சொன்னார் சிம்பு. இத்தனைக்கும் சிம்புவுக்கு தனது வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுத்தவர் ஐசரி கணேஷ்..
இதையடுத்து சிம்பு படம் வெளியானாலே பிரச்சனை செய்தார் ஐசரி கணேஷ். தற்போது வெற்றிமாறன் படத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. கண்டிப்பாக இந்த படம் வெளியாகும் போதும் அவர் பிரச்சனை செய்வார் என்பதால் கலைப்புலி தாணுவும், வெற்றிமாறனும் ஐசரி கணேஷை நேரில் சந்தித்து சமாதானம் பேசினார்கள்.. சிம்புவுக்கு கொடுத்த அட்வான்ஸ், அதற்கான வட்டி, செட்டுக்கான நஷ்ட ஈடு என எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 10 கோடிக்குக்ம் மேல் தரவேண்டும் என்று சொன்னார் ஐசரி கணேஷ்.

கலைப்புலி தாணுவும், வெற்றிமாறனும் சிம்புவிடமிருந்து ஏழரை கோடி உங்களுக்கு வாங்கி கொடுத்து விடுகிறோம் என சொல்லி விட்டு வந்து விட்டார்கள். ஆனால் சிம்பு இதுவரை எதுவும் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் என முடிவெடுத்த சிம்பு ஐசரி கணேஷை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவரிடம் பேச ஐசரி கணேஷ் விரும்பவில்லை. சமீபத்தில் திடீரென ஐசரி கணேஷின் அலுவலகத்திற்கு நேராக சென்றிருக்கிறார் சிம்பு..
மேலும் நான் 5 கோடி கொடுத்து விடுகிறேன்.. இந்த பிரச்சினையை முடித்து விடுங்கள் என சிம்பு சொல்ல கோபமடைந்த ஐசரி கணேஷ் ‘தாணுவும், வெற்றிமாறனும் என்கிட்ட பேசி நீங்க ஏழரை கோடி கொடுக்கிறதா சொல்லிட்டாங்க.. மறுபடி நீங்க வந்து புதுசா ஒன்னு சொல்லாதீங்க.. இனிமே உங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நான் அவங்ககிட்ட பணத்தை வாங்கிக்கிறேன்.. நீங்க கிளம்புங்க’ என்ன சொல்லி விரட்டாத குறையாக சிம்புவை அங்கிருந்து அனுப்பி விட்டாராம்.
சிம்பு பல தயாரிப்பாளர்களிடம் இப்படி பணம் தொடர்பான பிரச்சனைகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!. சிம்பு பணத்தை கொடுக்காவிட்டால் அரசன் படம் வெளியாகும்போது ஐசரி கணேஷ் பஞ்சாயத்து கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





