More
Categories: latest news

சுபஸ்ரீ மரணம்!.. அவதூறு செய்திகளை பரப்புவோருக்கு கடும் கண்டனம்.. ஈஷா அறிக்கை…

சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஈஷா கோரிக்கை

வைத்துள்ளது. ஈஷா சார்பில் வெளியிடப்பட்ட செய்தியாவது:

Advertising
Advertising

◆ சுபஶ்ரீயின் அகால மரணம் துரதிஷ்டவசமானது. யாரும் எதிர்பாராத இத்துயர சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

◆ காவல்துறை விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்தும் வெளியிட கூடாது என்ற உறுதியில் இத்தனை நாட்கள் அமைதி காத்தோம்.

◆ சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் காவல்துறைக்கு முறையாக வழங்கி உள்ளோம்.

◆ ஊடக முகமூடிகளை அணிந்து கொண்ட சில யூ-டியூப்பர்கள், புலனாய்வு என்ற பெயரில் மர்ம நாவல்கள் எழுதும் திறன் படைத்த ஊடக எழுத்தாளர்கள், மக்கள் ஆதரவு இல்லாத சில உதிரி அமைப்புகள் இதனை தங்கள் சுய லாபத்திற்காக அரசியலாக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.

◆ இவ்வழக்கு குறித்த வதந்திகள் & அவதூறுகளை சில இயக்கங்களும், ஊடகங்களும் உள்நோக்கத்தோடு செய்திகளாக வெளியிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

◆ வன்மமான அவதூறுகள் மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை பரப்பும் நபர்கள், இயக்கங்கள் & ஊடகங்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

◆ விழிப்புணர்வான உலகத்தை உருவாக்கும் எங்கள் நோக்கத்தையும், உறுதியையும் எவராலும் களைத்து விடமுடியாது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
சிவா

Recent Posts