அஜித்திற்கு அரசியல் ஆசையை காண்பித்த ஜெயலலிதா!.. தல சொன்ன பதில் என்ன தெரியுமா?..

by Rohini |
ajith_main_cine
X

ajith

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பவர். ஆனாலும் இப்படி இருக்கிற மனிதரை தான் பிரச்சினைகள் தானாக தேடி போய் விழும். அதே போல் தான் ஏகப்பட்ட பிரச்சினைகள் , வதந்திகள் என அஜித்தை சுற்றி சுற்றி வளைத்தன.

ajith1_cine

ajith jayalalitha

ஆனால் அதை எதையும் கண்டு கொள்ளாமல் தில்லாக எதிர்த்து நின்றார் அஜித். அதன் காரணமாகவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான நடிகராகவே திகழ்ந்தார் அஜித். இதை பற்றி ஒரு நேரத்தில் பல செய்திகள் வெளிவந்தன. இது எப்பொழுது ஆரம்பமானது என்றால் 2010 ஆம் ஆண்டு கலைஞருக்கு பாராட்டு விழா நடத்திய போது அஜித் மேடையில் பேசிய பேச்சால் எழுந்த சர்ச்சையால் ஒட்டுமொத்த அதிமுகவும் அஜித் பக்கம் இருந்தனர்.

அதிலிருந்தே ஜெயலலிதாவிற்கு அஜித் மீது ஒரு தனிப் பிரியம் உண்டு என்று அப்போதைய செய்திதாள்கள் எழுதியிருந்தது. இதை பற்றி பிரபல பத்திரிக்கை நிரூபர் செய்யாறு பாலாவும் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது ஜெயலலிதா எப்போதுமே அஜித்தை தன் மகன் போலவே பாவித்து வந்தார் என்றும் தனக்கு ஒரு மகன் இருந்தால் இதே மாதிரி அழகும் கலரும் வாய்க்கபெற்றவனாக இருந்திருப்பார் என்றும் நினைத்தார் என்று செய்யாறு பாலு கூறினார்.

ajith2_cine

ajith

மேலும் அஜித் திருமண வரவேற்பில் முதல் ஆளாக கலந்து கொண்டு வாழ்த்தினாராம் ஜெயலலிதா. அப்போதே அஜித்திடம் ஜெயலலிதா அரசியலுக்கு வருவதை பற்றி பேசினாராம். ஆனால் அஜித்தோ இல்லை, கடைசி வரை படங்களில் நடித்துக் கொண்டே போயிடுவேன் என்று ஜெயலலிதாவிற்கு பதில் கூறியிருக்கிறார் அஜித்.

இதையும் படிங்க : விஜயகாந்த் சொன்ன ஐடியா.. கேட்டிருந்தால் உசுரே போயிருக்கும்.. படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த சத்யராஜ்..

இதையும் அந்த வரவேற்பில் கலந்து கொண்ட செய்யாறு பாலு தான் தெரிவித்தார். ரஜினி, கமல், விஜய் இவர்கள் எல்லாம் தானாக தேடி போய் அரசியலில் குதித்தார்கள். ஆனால் அரசியல் அஜித்தை தேடி வந்திருக்கிறது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் அஜித். தன் ரசிகர் மன்றம் நிர்வாகிகள் அரசியலில் ஆதாயம் தேட பார்க்கிறார்கள் என்று தெரிந்து தான் தன் மன்றத்தையே கலைத்திருக்கிறார் அஜித் என்றும் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது.

ajith3_cine

ajith jayalalitha

மேலும் ஜெயலலிதா மறைந்த பொழுது திரையுலகமே அஞ்சலி செலுத்திய போது அஜித் விவேகம் படப்பிடிப்பிற்காக வெளி நாட்டில் இருந்தார். அங்க் இருந்து வந்ததும் மெரினாவில் ஜெயலலிதாவிற்கு குடும்பத்தோடு அஞ்சலி செலுத்தினார் அஜித். இதுவும் ஜெயலலிதா மீது அஜித் காட்டிய அன்பு என்று தான் காட்டுகிறது.

Next Story