நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருருப்பவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி கடந்த இரண்டு வருடங்களாகவே அரசியல் களத்தில் செயல்பட்டு வருகிறார். விஜய் பிரபலமான நடிகராக இருந்ததால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவேதான் ‘அரசியல் கட்சி துவங்கி அரசியல்வாதிகள் மக்களிடம் பிரபலமாவார்கள். ஆனால் நான் மக்களிடம் பிரபலமாக பிரபலமான பின்னர்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்’ என கூறினார் விஜய்..
மேலும் ‘என்னை வெளியே வா என சொல்கிறாரக்ள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இருக்கிறார்.. தேர்தல் வரும் போது அவர் வெளியே வந்து ஓட்டு போடுவார்.. நம்பிக்கையோடு இருங்கள்.. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்றெல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார்.

ஒருபக்கம், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தனது அரசியல் ரோல் மாடலாக விஜய் பார்ப்பதாக சொல்லப்படுகிறது.. ஆந்திர அரசியலில் பெரிய சக்தியாக இருந்த சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்தது, அவரை கைது செய்தது, அவரை கடுமையாக விமர்சனம் செய்தது போன்ற விஷயங்களைத்தான் விஜயும் பின்பற்றுவதாக தெரிகிறது..
இன்னும் சொல்லப்போனால் ஜெகன்மோகன் ரெட்டி போலவே காக்கி கலர் பேண்ட் மற்றும் வெள்ளை கலர் சட்டையும் விஜய் அணிகிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள். சமீபத்தில் கூட ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் திருமணம் சென்னையில் நடந்த போது விஜய் அதில் கலந்து கொண்டார். அப்போது அரசியல் தொடர்பாக இருவரும் ஆலோசனை செய்ததாகவும் தெரிகிறது.
