More
Categories: Cinema News Entertainment News

அழுக்கு ஜட்டி தொங்கவிட்டிட்டோம் போதுமா…? புளூசட்ட மாறனுக்கு இவ்ளோ நக்கல் ஆகாது!…

இந்திய சினிமாவை தாண்டி உலக தரம் வாய்ந்த திரைப்படமாக சூர்யாவின் ஜெய்பீம் படம் புகழ் பெற்றுள்ளது. இருளர்களின் வாழ்க்கை குறித்தும், இந்த சமுதாயம் அவர்களை நடத்தும் விதம் குறித்தும் உணர்ச்சி பூர்வமான உண்மை கதையை உலகிற்கு காட்டியது.

இந்த படத்திற்கு பல தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்து சூர்யாவிற்கு பெயரும் புகழும் தந்துள்ளது. ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் காவல் ஆய்வாளர் வீட்டில் வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைத்திருந்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

Advertising
Advertising

இதையும் படியுங்கள்: நான் வீழ்வேனென்று நினைத்தாயே?!.. மாநாடு தயாரிப்பாளர் போட்ட மாஸ் டிவிட்…

அரசியல் கட்சியனர் முதல் அந்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்த மக்கள் வரை அதற்கு எதிர்ப்புகள் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்த மீம்ஸ் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, காலண்டர் காட்சியில் அக்கினிக் கலசத்திற்கு பதிலாக காவல் ஆய்வாளரின் அழுக்கு ஜட்டியை தொங்கவிட்டுட்டோம் போதுமா… இதோடு சர்ச்சை நிறுத்துங்கள் என்ற மீம்ஸ் வைரலாகியுள்ளது.

இந்த மீம்ஸை பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்ட மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில பகிர அவர் மீது எப்போதும் கடுப்பில் இருக்கும் விஜய், சிம்பு, அஜித் ரசிகர்களை அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

Published by
பிரஜன்

Recent Posts