More
Categories: Cinema News latest news

ஜெய்பீம் போலீஸ் வேடத்தில் நடித்தது அவரா?… ஆச்சர்ய தகவல்…

பத்திரிக்கையாளர் ஞானவேல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார்.

விழுப்புரம் அருகே வாழும் இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையையும், அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு (பின்னாளில் நீதிபதி சந்துரு) என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை கதையை திரைக்கதை ஆக்கியுள்ளனர். வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியானது.

Advertising
Advertising

இப்படம் கடந்த 10 வருடங்களில் வெளிவந்த சிறந்த படங்களில் முக்கியமான படம் என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமரசம் செய்து கொள்ளாமல் அந்த கதையை ரத்தமும், சதையுமாக இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். இப்படத்தை பார்த்த பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தில் எஸ்.ஐ குருமூர்த்தி என்கிற கதாபாத்திரம் வருகிறது. அவர்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ராஜாக்கண்ணுவை காவல் நிலையத்தில் கட்டி தொங்க விட்டு அடிப்பார். டெரர் போலீஸாக அவர் வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் ஒரு இயக்குனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர் பெயர் தமிழ். விக்ரம் பிரபு நடித்துள்ள ‘டானாக்காரன்’ படத்தின் இயக்குனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது. ஜெய்பீம் படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இயக்குனர் சேரனும் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts