ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!.. அப்செட்டில் ஜனநாயகன் புரட்யூசர்!..

Published on: April 15, 2026
jananayagan
---Advertisement---

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் முழு படமும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் படத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் மீண்டும் மறுத்தணிக்கை செய்யப்பட வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஒரு மாத காலமாகியும் எதுவும் நடக்காததால் வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுத்தணிக்கைக்கும் விண்ணப்பித்தார்..

ஆனால் அதை நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இப்போதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு முழுபடமும் இணையத்தில் வெளியானது. பலரும் அதை இணையதளங்களில் இருந்து டவுன்லோட் செய்து பார்த்துவிட்டனர்.. இது படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே படம் வெளியாகாமல் கால தாமதமானதால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் என்கிற நிலையில் தற்போது முழு படமும் லீக்காகி விட்டதால் தயாரிப்பாளருக்கு மேலும் பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டது. எனவே இந்த நஷ்டத்தை போக்க அதே தயாரிப்பாளருக்கு விஜய் மீண்டும் ஒரு திரைப்படத்தில் குறைவான சம்பளத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிற செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.. பல ஊடகங்களிலும், இணையதளங்களிலும் இந்த செய்தி பேசப்பட்டு வருகிறது..

ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.. விஜய் இப்போது வரை ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்திற்கு அப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்கவில்லையாம். அது கூட பரவாயில்லை.. ஜனநாயகன் லீக் ஆனதும் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு ஆறுதலுக்காக கூட ‘ஒன்றும் வருத்தப்படாதீர்கள்.. நாம் ஏதாவது செய்வோம்’ என சம்பிரதாயத்திற்கு கூட விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என சொல்கிறார்கள்.

விஜயின் நடவடிக்கையை பார்க்கும் போது கண்டிப்பாக அந்த தயாரிப்பாளருக்கு விஜய் இன்னொரு படம் நடித்து கொடுக்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. ஒருபக்கம், படத்தை விரைவில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர் இறங்கியிருக்கிறார். அனேகமாக, தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின் ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.