மீண்டும் மாமியார் தலையில் மசாலா அரைக்க முயற்சி பண்ணும் ஜெயம் ரவி!.. இயக்குநர் தான் காப்பாத்தணும்!

Published on: February 27, 2024
---Advertisement---

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை வெளியான படங்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. கீர்த்தி சுரேஷ் உடன் ஜெயம் ரவி இணையும் போதே சைரன் சங்கு ஊதும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அந்த படமும் வசூலில் பல்பு வாங்கி விட்டது.

அந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தான் தயாரித்து இருந்தார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தையே அவர் தான் நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே பல படங்களை தனது மருமகன் ஜெயம் ரவிக்காக நஷ்டம் அடைந்தாலும் லாபம் அடைந்தாலும் பரவாயில்லை என தயாரித்து வருகிறார்.

இதையும் படிங்க: அந்த பாட்டை பாலு மூச்சி விடாமலாம் பாடல!.. உங்களை ஏமாத்திட்டோம்!. பகீர் கிளப்பும் கங்கை அமரன்..

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி மற்றும் சமீபத்தில் வெளியான சைரன் 108 உள்ளிட்ட படங்களை அவர் தான் தயாரித்துள்ளார். ஆனால், இந்த இரு படங்களும் வெற்றியடையவில்லை. இந்நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் இன்னொரு படத்தையும் அவர் தயாரிக்க முன் வந்திருக்கிறாராம்.

அடங்கமறு படத்தை ஜெயம் ரவி, ராஷி கன்னாவை வைத்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்ஹ இயக்குநர் கார்த்திக் தங்கவேல் 2018ம் ஆண்டு ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு படத்தை இயக்கினார். அதன் பின்னர் 6 ஆண்டுகள் வேறு எந்த ஹீரோவும் இவரை நம்பி நடிக்க முன் வரவில்லை. இந்நிலையில், மீண்டும் ஜெயம் ரவியை அவர் இயக்கப் போகிறார்.

இதையும் படிங்க: மாளவிகா மோகனனுக்கு கல்யாணமா?.. மணமகள் போல ஜொலிக்கும் ஸ்டில்ஸ்.. என்ன சொன்னாரு தெரியுமா?

அடங்கமறு படத்தையே சுஜாதா விஜயகுமார் தான் தயாரித்தார். இந்நிலையில், மீண்டும் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் வெளியாக உள்ள படத்தை அவரே தயாரிக்க உள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.