Categories: latest news

ஜெயம் ரவிக்கும், தனுஷூக்கும் இடையே நடந்த விவகாரம்… விவகாரத்துக்கு இதுவும் காரணமா?

பொதுவாகவே தம்பதியருக்குள் வாரிசு இல்லன்னா விவாகரத்து ஆகும். அல்லது சின்ன சின்ன பிரச்சனைகள் பெரிசாகி மனக்கசப்பு உண்டாகி விடும். அதுவும் இருக்கலாம். வாரிசே இல்லன்னாலும் சேர்ந்து வாழ்பவர்கள் பலர் இருக்காங்க. சின்ன சின்ன பிரச்சனைகளை பூதாகரமாக்க சில கேரக்டர்கள் இருப்பாங்க. அவங்களே குடும்பத்தைப் பிரிக்க பெரிய காரணமாக இருப்பாங்க. அந்த வகையில் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஜெய்சங்கர் ஜெயம் ரவி விவாகரத்து குறித்து சில காரணங்களைப் பகிர்ந்துள்ளார். வேறு என்னென்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.

பண்பட்ட மனிதர்களின் விவாகரத்து விவகாரம் எப்படின்னா அவர்களது தொழில்முறை வாழ்க்கையுடன் சொந்த வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்துவது ஒரு காரணமாகி விடுகிறது. ஜெயம் ரவி விவாகரத்து மற்ற விஷயங்களுக்காக அல்ல. இவர்களுக்குள் பிரதான காரணம் பொருளாதாரம். அவருக்கு அடுத்தடுத்த படங்கள் தோல்வியைத் தழுவின. கதைகள் தேர்வு செய்யும் விதம். சூர்யா, விஜய் எல்லாம் கேரியரில் டெவலப் ஆகி எங்கேயோ போயிட்டாங்க.

Also read: டைவர்சா? எப்போ? ஜெயம் ரவி அறிக்கைக்கு ஆர்த்தி வெளியிட்ட அதிரடி பதில்!.. செம டிவிஸ்டா இருக்கே..

ஜெயம் ரவி நல்ல ஸ்டார் வேல்யு வந்த பிறகு தான் லவ் பண்றாங்க. அதனால அவர்களுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தாங்கிக்க முடியலை. கணவனுக்கு பொருளாதார சரிவு வரும்போது தாங்கிப் பிடிக்கணும். அது தான் நல்ல மனைவிக்கு அழகு. மற்றவர்களின் நலன் கருதி விவாகரத்து என சொல்லும் ஜெயம் ரவி யாரைச் சொல்றாருன்னா அவரது மனைவி மற்றும் மாமியாரைத் தான் என்று நான் நினைக்கிறேன்.

இங்கு தான் சிக்கல். கணவன் மனைவி கூடவும் பேலன்ஸ் பண்ணனும். அவரது சைடும் பேலன்ஸ் பண்ணனும். இங்கு தான் அவருக்கு சிக்கல். மாமியாரே ரவி வந்து எனக்கு மருமகன் அல்ல. மகன் என்று தெரிவித்துள்ளார். ஜெயம் ரவியின் வெற்றியைக் கொண்டாட நிறைய பேர் வந்தாங்க. ஆனா தோல்வி என்றதும் முழுக்க முழுக்க அவர் மீது பழி விழுகிறது.

திருமணமானதும் முழுக்க முழுக்க கதை தேர்வு பொறுப்பை மாமியார் தான் பார்த்தாராம். ஆரம்ப காலத்தில் அப்பாவும், அண்ணனும் தான் இதைக் கவனித்து வந்தார்கள். அதனால் தான் சொல்றேன். பிரைவேட் லைஃபையும், புரொபசனல் லைஃபையும் ஒண்ணா சேர்க்கக்கூடாது. பிரச்சனையே அங்கு தான் உருவாகிறது.

ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கும், தனுஷூக்கும் ஒரு பார்ட்டியில் சண்டை வந்தது. அவர் காரணமான்னு கேட்டபோது பொதுவாகவே விவாகரத்துன்னா தனுஷ் தான் காரணம்னு சொல்றாங்க. ஆனா இது நடக்கறதுக்கு வேணா வாய்ப்பு இருக்கு. ஆனா பெரும்பான்மையான காரணம்னா படங்களோட தோல்வி தான். சினிமாவைப் பொருத்தவரை பிசியாகவே இருக்கணும்.

ஜெயம் ரவிக்குப் படங்கள் இல்ல. அடுத்தடுத்து தோல்வி. இந்த இடத்துல அவரோட பேமிலி சப்போர்ட் பண்ணனும். பொதுவாக பெண்களால தான் பிரச்சனை. அடிஷனல் கேரக்டர்கள் தான் காரணம். கணவன், மனைவிக்கு நடுவில் இன்னொரு கேரக்டர் வரவே கூடாது.

JRA

அப்படி வந்ததுன்னா விரிசல் ஆகிவிடும். அது வராதவாறு பார்த்துக்கணும். காற்று கூட உள்ளே நுழையக்கூடாது. அப்படி இருந்தா எந்த தனுஷூம் வர முடியாது. உறவுகளே வரமுடியாது. அப்புறம் எப்படி 3வது மனிதன் வருவான்? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago