தனுஷ் திருமணத்தில் இத ஏன் காட்டல?!.. உங்களுக்கு என்ன தகுதி இருக்கு!.. இப்படி பொங்கிட்டாரே!..

Published on: November 13, 2024
nepo
---Advertisement---

சமீபத்தில் நடிகர் நெப்போலியன் மகனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் விமர்சையாக நடைபெற்றது .அந்த திருமணத்திற்கு திரையுலகை சார்ந்த ஒரு சில பேர் கலந்து கொண்டனர் .குறிப்பாக நெப்போலியனுக்கு நெருக்கமான நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். குஷ்பூ, ராதிகா, சுகாசினி ,மீனா, கலா மாஸ்டர் என ஒரு கேங் கலந்து கொண்டு திருமணத்தை கலகலப்பாக்கினர் .

இது மட்டுமல்ல தனுஷின் மனைவியை இவர்கள் அனைவரும் பாராட்டி பேட்டிகளில் பேசி இருந்தனர். இதைப்பற்றி பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா அவருடைய ஆதங்கத்தை கூறுகிறார். காசு இருந்தா என்ன வேணாலும் பண்ணலாம் என்பதற்கு உதாரணம்தான் இந்த திருமணம். குறிப்பாக நடிகைகள் ஆட்டம் போட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதையும் படிங்க: போட்டோகிராபரிடம் எறிஞ்சி விழுந்த ரஜினி… சாயங்காலம் ஆனா அவருக்கு மூடே மாறிடுமாம்….!

இது போன்ற ஒரு நிகழ்வு அவர்கள் வீட்டில் நடந்திருந்தால் இந்த மாதிரி அவர்கள் மகிழ்ச்சியில் இருந்திருப்பார்களா? அது மட்டுமல்லாமல் மீடியாக்களையும் சேர்த்து அவர் வசைப்பாடி இருக்கிறார். எல்லாத்தையும் காட்டினீங்களே. எல்லாரும் மேடையில் டான்ஸ் ஆடினார்கள். அவர்கள் அம்மா அப்பாவை ஏன் காட்டவில்லை ?

அவர்கள் சந்தோஷத்திலா இருந்தார்கள்? என்னை பொறுத்த வரைக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. உங்களுக்கு சரியான ஒரு விஷயம் பொது நியாயப்படி தவறான ஒரு விஷயத்தை நீங்கள் நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள். அதற்காக சில காட்சிகளை திணிக்கிறீர்கள். அதுதான் தவறு. நடிகைகளை விட்டு பேட்டிகளில் பேச சொல்கிறீர்கள்.

இதையும் படிங்க: Bloody Beggar: பிளடி பெக்கர் லாஸ்… யோசிக்காமல் நெல்சன் செய்த செம மேட்டர்… நீங்க கிரேட்டு சார்…

nepolean
nepolean

அவர்கள் எல்லாம் பெரிய புத்திசாலியா? அவங்க குடும்பத்துல இப்படி பண்ணுவாங்களா? உங்கள பெருமையா பேசணும்ங்கறதுக்காக பத்து நடிகைகளை கூப்பிட்டு வந்து பேச வைக்கிறீர்கள். அவர்கள் இன்னொருவரின் வாழ்க்கைக்கு கருத்து சொல்ல தகுதியானவர்களா என சரமாரியாக கேள்விகளை கேட்டிருக்கிறார் சேகுவாரா. ஏற்கனவே நெப்போலியன் மகன் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதில் இவரும் அவருடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.