Connect with us
vani

Biggboss Tamil 7

வெளியேறுகிறாரா ஜோவிகா! அனல்பறக்கும் விவாதத்தால் எழுந்த சர்ச்சை – பிக்பாஸில் நாளை நடக்கப் போகும் சம்பவம்

Jovika: பிக்பாஸில் நாளை அனைவரும் எதிர்பார்க்கும் கமல் எபிசோடில் ஆண்டவர் என்னெல்லாம் பேசப் போகிறார் என்பது குறித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு இந்த வாரம் கடுமையான காரசார விவாதங்கள் அரங்கேறியிருக்கின்றன.

குறிப்பாக விஷ்ணு மற்றும் அர்ச்சனா இவர்களுக்கிடையே கடந்த சில நாள்களாகவே பிரச்சினை கொழுந்துவிட்டு எரிகின்றது. ஆரம்பத்தில் என்னப் பொண்ணுடா என அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்த ஜோவிகா இப்போது இருக்கிற இடமே தெரியாமல் தெரிகிறார்.

இதையும் படிங்க: அனிமல் விமர்சனம்: ரன்பீர் கபூரின் அசுரத்தனமான நடிப்பு!.. அதை மட்டும் சரி செஞ்சிருக்கலாம் சந்தீப் ரெட்டி!

மேலும் மாயா மற்றும் பூர்ணிமாவுடன் சேர்ந்து அட்டகாசம் செய்து வந்த ஜோவிகாவிற்கு இலைமறை காயாக வனிதா ஒரு டி- சர்ட்டை அனுப்பி வைத்தார். அதில் சிங்கம் எப்போதும் சிங்கிளாகத்தான் இருக்கும் என்று எழுதியிருந்தது.

அது கூட புரியாத ஜோவிகா மீண்டும் மாயா – பூர்ணிமாவுடன் இணைந்து தான் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் சமீபகாலமாக ஜோவிகாவை குறித்து பல ட்ரோல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: முதன்முறையாக ஒரே நடிகரின் இரு படங்கள் ரிலீஸ்!. ரெண்டுமே சூப்பர் ஹிட்!.. கெத்து காட்டிய நடிகர் திலகம்…

தூங்குவது, சாப்பிடுவது, உட்காருவது இதுதான் அவருடைய வேலையாகவே இருக்கிறது என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். இன்று வெளியான ப்ரோமோவில் ஜோவிகாவிற்கும் ரவீனாவிற்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெறுகின்றது.

அதில் ஜோவிகாவை கேங்கப் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார் ரவீனா. இதனால் கடுப்பான ஜோவிகா அழுதுகொண்டே நான் வீட்டிற்கே போய்விடுகிறேன் என்றும் என் அம்மாவிடமே சென்றுவிடுகிறேன் என்றும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகள் அதில் இடம் பெறுகின்றன.

இதையும் படிங்க: இது வரைக்கும் கேமிரா பாத்து சொன்னதில்லை! வெட்கமே இல்லாம இவ்வளவு ஓப்பனா சொன்ன சரவணவிக்ரம்

அதுமட்டுமில்லாமல் இந்த வார நாமினேஷனில் ஜோவிகாவின் பெயரும் இடம் பெற்றிருப்பதால் வோட் அடிப்படையில் அவர்தான் கடைசியாக இருக்கிறார். அதனால் ஒருவேளை ஜோவிகா வெளியேறுவாரோ என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top