Categories: latest news

சென்னை வந்தாலும் சூர்யா வீட்டில் தங்காத ஜோதிகா!.. அப்படி என்ன பஞ்சாயத்து?!…

வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகை ஜோதிகா. மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர். வசந்த் இயக்கத்தில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சூர்யா.

அப்போதே இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிவிட்டது போல. அதன்பின் ஜோதிகா ஒருபக்கமும், சூர்யா ஒருபக்கமும் வளர துவங்கினர். சூர்யாவுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் ஜோதிகா. எனவே, இருவருக்கும் இடையே காதல் தீ பத்திக்கொண்டது.

இதையும் படிங்க: வேறு வழியில்லாமல் நிக்கோலை கரம்பிடிக்கும் வரலட்சுமி! பின்னணி காரணம் என்ன தெரியுமா?

இதற்கு சூர்யாவின் அப்பா சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்தாலும் சூர்யா பிடிவாதமாக இருந்ததால் திருமணத்திற்கு சம்மதித்தார். 2006ம் வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்களாக இருவரின் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருக்கிற்து. இருவருக்கும் ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.

பல வருடங்கள் சென்னையில் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்த சூர்யா கடந்த சில வருடங்களாக மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். இதற்கு பின்னனியில் ஜோதிகா இருப்பதாகவே சொல்லப்படுகிறது. சூர்யாவை பாலிவுட் ஹீரோவாக மாற்ற வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். ஆனால், அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் தமிழிலேயே சூர்யா பெரிய இடைவெளி விட்டிருக்கிறார். அவரின் கடைசிப்படம் எதற்கும் துணிந்தவன் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. அதன்பின் கங்குவா என்கிற படத்தில் நடித்தார். இப்படத்தின் வேலைகள் ஒன்றரை வருடங்களாக நடந்து முடிந்திருக்கிறது.

இந்நிலையில், மும்பையிலிருந்து சென்னை வந்தாலும் ஜோதிகா தி.நகரில் கடல்போல சூர்யா கட்டியிருக்கும் பிரம்மாண்ட பங்களாவில் தங்குவதில்லை. ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில்தான் தங்குகிறாராம். இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

43 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago