kaavya arivumani

Kaavya arivumani: காவ்யா அறிவுமணி சென்னையில் பிறந்து வளந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அப்படியே நடிக்கும் ஆசையும் இவருக்கு வந்துவிட்டது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.

kaavya

எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம்போய் வாய்ப்பு தேடினார். விஜய் டிவி இவருக்கு வாய்ப்பு கொடுத்தது. அப்போது டி.ஆர்.பியில் சக்கை போடு போட்ட பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்க வாய்ப்பு வந்தது.

kaavya

ஏனெனில், அந்த வேடத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டு உயிரை விடவே காவ்யாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல எபிசோட்களில் முல்லையாக காவ்யா நடித்தார். ஆனால், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

kaavya

சீரியலிலேயே தொடர்ந்து நடித்து வந்தால் தனது சினிமா கனவு என்னாவது என நினைத்தே அவர் அந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது. அதேநேரம், காவ்யா நினைத்தது போல சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் அவ்வளதான்.

kaavya

இப்போது சீரியலும் இல்லாமல் சினிமாவும் இல்லாமல் தவித்து வரும் காவியா கவர்ச்சி காட்டியாவது வாய்ப்புகளை பெற்றுவிடுவது என முடிவெடுத்து கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரின் புதிய புகைப்படங்களை பார்த்தாலே நமக்கு அது தெரிகிறது.

kaavya
kaavya
சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.