Categories: latest news

உலக நாயகனுக்கே பயமா…? தன்னைத் தக்க வைக்கப் போராடும் கமல்…! வேறு கோணத்தில் சிந்தித்த பிரபலம்..!

உலகநாயகன் கமல் தற்போது பிரபாஸ் நடித்த கல்கி 2898 AD படத்தில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். இது பற்றி எல்லா ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தப் படம் வரும் 27ம் தேதி வருகிறது. இதையொட்டி பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…

கமலைப் பொருத்தவரை நடிகர் என்பதை விட பன்முகக் கலைஞர். அவருக்கு இசை நல்லா தெரியும். நல்லா பாடுவாரு. நடனம் முழுமையா தெரியும். அவர் பாடிய பாட்டை இன்னொருவர் பாடுறது சிரமம். சிறந்த எடிட்டர். சிறந்த டான்சர். நாயகன் படத்துல நான் டான்ஸ் பண்ண மாட்டேன். எனக்கு டான்ஸ் வைக்காதீங்கன்னு சொன்னாரு. படத்துக்குத் தேவைன்னா மட்டுமே டான்ஸ் வைப்பாங்க.

இதையும் படிங்க… டெரர் இயக்குனர் படத்தில் நடிகையை கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட சூர்யா!.. இவ்வளவு கஷ்டப்பட்டாரா!…

சினிமாவில் எம்ஜிஆரையும் தாண்டி கூடுதலாக திறமை உள்ளவர் கமல். கட்சியை ஆரம்பிச்சிட்டு அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்பதை லேட்டா புரிஞ்சிக்கிட்டாரு. அதனால கட்சியையும் கலைக்காம வச்சிருக்காரு.

கல்கியைப் பொருத்தவரை அது பிற்போக்கான படம். புராணப்படம் எடுக்கறது தப்பில்ல. கர்ணன் ஒரு விஷயத்தைச் சொல்லும். சரஸ்வதி சபதம் படம் ஒரு பட்டிமன்றம். கல்வியா, செல்வமா, வீரமான்னு கொண்டு போயிருப்பாங்க. வாழ்க்கை நிலையில்லாதது என்பதை திருவிளையாடல் படத்தில் பார்த்தால் பசுமரம் என்ற பாடலில் சொல்லியிருப்பார்கள்.

Kali

கல்கி படத்துல 90 சதவீதம் பிற்போக்கு அரசியல் இருக்கு. பிரபாஸ் கடைசியாக நடித்த ஆதிபுருஷ் என்பது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். சீதை பட்ட துன்பத்தைக் கூட சொல்லல. கல்கி படத்துல கமல் ஏன் நடிக்கிறாரு? தன்னைத் தக்க வைப்பதற்கா என்ற கேள்வி எழுகிறது. இந்தியன் 2, தக் லைப்னு தொடர்ச்சியா படங்கள் வருது. அவரே உலகநாயகன் தானே. இவர் ஏன் அங்கே போய் வில்லனா நடிக்கணும்? இன்னொன்னு என்னன்னா அவருக்கே பயம் இருக்கான்னு தோணுது.

ட்ரெண்டு மாறிடுச்சுன்னு பயம் வருதோ? எம்ஜிஆருக்கே பயம் வந்துடுச்சு. 70களில் ஜெயலலிதாவே பழைய ஹீரோயினா ஆகிட்டாங்க. முடி நிறைய வைத்தது, சட்டைக் காலரை பெரிசாக்குவது, உரிமைக்குரல் படத்தில் தெலுங்கு ஹீரோ மாதிரி, சப்பல்லா அது மாதிரி போட்டுருப்பாரு.
மஞ்சுளா, லதா தான் அப்போ அவருக்கு மெயின் ஹீரோயின். இப்படி எல்லாம் மாறணும்னு எம்ஜிஆருக்கு யாரோ சொல்லிருக்காங்க. அந்த வகையில்

கமல் சிறந்த படைப்பாளி. யாரும் சொல்லக்கூடாத விஷயத்தைத் தைரியமாகச் சொல்லக்கூடியவர். தலைமுறை மாற்றத்தில் தன்னைத் தக்கவைக்கறதுக்காக இப்படி கமல் நடிச்சிருக்காரான்னு தோணுது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

2 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

2 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

10 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

11 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

12 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago