மகளுக்காக ஒரு பைசா கூட தராத கமல்! வெட்ட வெளிச்சமாக்கிய சுருதிஹாசன்

kamal (3)
Shurutihasan: சமீபத்தில் கமல் பற்றி பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் புஜ்ஜி பாபு ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். இந்தியன், அவ்வை சண்முகி போன்ற படங்களுக்கு இவர்தான் மேக்கப் கலைஞர். அவ்வை சண்முகி படத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது தன்னுடைய மகள் படிப்பு செலவுக்காக கமலிடம் பணம் கேட்டதாகவும் அதற்கு கமல் கொடுக்க மறுத்ததாகவும் அதிலிருந்து கமல் படங்களில் இனி நான் பணியாற்ற மாட்டேன் என வந்துவிட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
இதேபோல் இப்போது இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது. இதை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறுகிறார். அதாவது கமலுக்கு இரண்டு மகள்கள் அதில் ஸ்ருதிஹாசன் இன்று ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஸ்ருதிஹாசன் பிறந்ததுமே கமல் அவருடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று விலகி விட்டார். அதிலிருந்து சுருதிஹாசனும் அவருடைய சகோதரியும் தாயின் பராமரிப்பில் தான் வளர்ந்து வருகிறார்கள்.
இதுவரை தன்னுடைய எந்த செலவுக்கும் கமலிடம் இருந்து ஒரு ரூபாய் ஸ்ருதிஹாசன் வாங்கியதில்லை என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார். இதை ஸ்ருதிஹாசனே ஒரு பேட்டியில் பகிருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். தாயின் பராமரிப்பில் இருந்த ஸ்ருதிஹாசன் அவருடைய படிப்பு செலவு பிற செலவுகள் என எல்லாவற்றையும் அவருடைய அம்மா தான் கவனித்துக் கொண்டாராம் .இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் விவாகரத்து பெற்ற பிறகு கமலிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவருடைய அம்மாவும் கூறி இருந்தாராம் .
நிறைய பேர் ஸ்ருதிஹாசனை பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு என்ன கமல்ஹாசனின் மகள் பெரிய கோடீஸ்வரி என்றுதான் கூறுவார்களாம். ஆனால் அது சற்றும் உண்மை இல்லை என சுருதிஹாசன் பல பேட்டிகளில் கூறி இருக்கிறாராம். இதுவரை ஸ்ருதிஹாசன் தன்னுடைய வாழ்க்கை செலவுகளுக்காக அவருடைய தந்தையான கமல் ஒரு காசு கூட செலவழித்ததே இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார் .
கமலிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு அவருடைய முன்னாள் மனைவி தன்னுடைய பிள்ளைகளை வைத்துக்கொண்டு வறுமையின் பிடியில் தான் மகள்களை வளர்த்திருக்கிறார். இருந்தாலும் முன்னாள் கணவரான கமலிடம் ஒரு பைசா கூட கேட்டதில்லையாம். உங்க அப்பா சம்பாதித்த காசில் நான் வாழனுமா அப்படியே வாழ தேவையே இல்லை என்று சொன்னாராம் அவருடைய அம்மா.
அந்த அடிப்படையில் எல்லா செலவுகளையும் சுருதிஹாசனின் அம்மா தான் கவனித்து வந்தார். இவர் நடிக்க வந்ததுக்கு கூட அவருடைய அம்மா தான் காரணமாக இருந்திருக்கிறாராம். இப்போது இவருடைய வாழ்க்கையில் உதாரண புருஷராக கமலை ஒருபோதும் சொன்னதே கிடையாதாம். தன்னுடைய அப்பா கமல் அவ்வளவுதான் என்று சொல்வாராம். என்னுடைய முடிவுகளை நானே சுதந்திரமாக எடுக்கிறேன். இன்று பலர் நான் எத்தனை பேரை காதலித்தேன் என நம்பர்கள் மூலமாக சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் எனக்கு வாழ்க்கையில் தகுதியான கணவர் இதுவரை கிடைத்ததில்லை. கிடைப்பாரா என்றும் தோன்றவில்லை என சுருதிஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.