பாடலாசிரியருக்காக சூட்டிங்கையே கேன்சல் செய்த கமல்… இவ்ளோ விஷயம் நடந்திருக்கா?

கவிஞர் கபிலன் வைரமுத்து 14 வயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு எழுதத் தொடங்கியவர். முறைப்படி கவிதை புனைவதற்கான இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தவர். அவர் தான் எழுதிய ஒரு புத்தகத்தை கமல் வெளியிட வேண்டும் என்று விரும்பினார். அதை எப்படி நடத்தி முடித்தார் என்பதை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு சொல்கிறார்.

இதையும் படிங்க… ‘கல்கி’ படம் பார்த்த சூப்பர் ஸ்டார்! படத்தை பற்றி என்ன சொல்லியிருக்காரு பாருங்க

இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் மாதேஷ் என்னோட நண்பர். சாக்லேட் படம் அவர் தான் இயக்கினார். அப்போ அவர் ‘முதல்வன்’ படம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. ‘நான் தெரு ஓவியம்னு ஒரு புத்தகம் போட்டுருக்கேன். கமல் சார்கிட்ட கூட்டிட்டுப் போக முடியுமா’ன்னு மாதேஷிடம் கேட்டேன்.

Kabilan Kamal

அவரும் ‘சரி’ன்னு அழைச்சிட்டுப் போனார். நான் ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்தே கமலின் தீவிர ரசிகர். அப்போ ஆழ்வார்பேட்டை ஆபீசுக்குப் போறேன். அரை மணி நேரமா கமல் சாரிடம் பேசினேன். புத்தகத்தைக் கொடுத்தேன். ‘சரி நான் படிக்கிறேன்’னாரு. அங்கு ஒரு நண்பர் இருந்தார். எங்கூட படிச்சவர் தான்.

ரசிகர் மன்ற நிர்வாகி குணசீலன் தான் அவர். அப்புறம் அவர்கிட்ட போன் பண்ணி அடிக்கடி பேசி கமல் சார்கிட்டயும் பேசினேன். ‘புத்தகம் வெளியிட ஒரு விழா வைக்கிறேன். நீங்க வந்தா நல்லாருக்கும்’னு கமலிடம் ஒரு நாள் அனுமதி கேட்டேன். ‘சரி கூப்பிடுங்க’ன்னாரு. ‘கவிதையைப் படிச்சிப் பார்த்தேன். நல்லாருக்குதே’ன்னு சொன்னார். அதுக்கு அப்புறம் 3 நாள்களைக் குறிச்சிக் கொடுத்தேன். அதுல ஒரு நாளை கமல் செலக்ட் பண்ணினார்.

சரின்னு அந்த தேதில புத்தக வெளியீட்டு விழாவை வச்சோம். ராணி சீதை மன்றத்துல தான் நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணியிருந்தோம். அன்னைக்கு கமல் சார் ‘தெனாலி’ பட சூட்டிங்கிற்கு கொடைக்கானல் போயிருந்தாரு. ஆனா வரேன்னு சொல்லிட்டாரு. வந்துட்டு நிகழ்ச்சி எல்லாம் முடிச்சிட்டு போனாரு. அன்னைக்கு மாலை 5 மணில இருந்து 7 மணிக்குள்ள நிகழ்ச்சியை நடத்தி முடிச்சிட்டோம்.

கமல் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பில் இருந்து வந்துட்டு இங்கே இருந்து டிரெய்ன்ல மதுரை போனாரு. அந்த நிகழ்ச்சிக்கு தாணுவும் வந்து இருந்தாரு. அவர் தான் கமல் சாரிடம் இருந்து புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் நன்றி சொல்றதுக்கு எக்மோர் போனேன். அது தான் முதல் சந்திப்பு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க… கங்கை அமரன் மறுத்ததால் பாக்கியராஜிக்கு கிடைத்த சான்ஸ்… இளையராஜாவின் பாடலில் இப்படி ஒரு கூத்தா?

தசாவதாரம் படத்தில் மண்ணைப் பற்றி கபிலன் ஒரு கவிதை சொல்வார். கவிஞராகவே அவரை சினிமாவிற்குள் அழைத்து வந்திருப்பார் கமல். அதன்பிறகு கமலின் பல படங்களில் பாடல் எழுதி இருக்கிறார். இந்தியன் 2 படத்திலும் காலண்டர் சாங்கை இவர் தான் எழுதியுள்ளார்.

 

 

sankaran v

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

6 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

7 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago