Connect with us
kamalhaasan

Cinema News

ஜெய்பீம் படம் கண்களை குளமாக்கியது! – கமல்ஹாசன் பாராட்டு

பத்திரிக்கையாளர் ஞானவேல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார்.

விழுப்புரம் அருகே வாழும் இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையையும், அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு (பின்னாளில் நீதிபதி சந்துரு) என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை கதையை திரைக்கதை ஆக்கியுள்ளனர். வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படம் நேற்று இரவு அமேசான் பிரைமில் வெளியானது.

இப்படம் கடந்த 10 வருடங்களில் வெளிவந்த சிறந்த படங்களில் முக்கியமான படம் என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமரசம் செய்து கொள்ளாமல் அந்த கதையை ரத்தமும், சதையுமாக இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். இப்படத்தை பார்த்த பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட இப்படம் ஒரு சிறந்த படம் என டிவிட்டரில் கூறியிருந்தார்.

jai bhim

இந்நிலையில், இப்படத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று பார்த்துள்ளார். அதையடுத்து படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். அதோடு, டிவிட்டர் பக்கத்தில் ‘ஜெய்பீம் படம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல், பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா ,ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்’என பதிவிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top