சனியன் ஒன்னுத்துக்கும் யூஸ் இல்ல!.. டோட்டலி வேஸ்ட்!.. ராதிகாவை திட்டித்தீர்த்த கமல்ஹாசன்!..

பழம்பெரும் நடிகர், பகுத்தறிவை சினிமாவில் பேசி நடித்த நடிகவேள் எம்.ஆர்.ரதாவின் மகள்தான் ராதிகா. பாரதிராஜா தனது ‘கிழக்கு போகும் ரயில்’ படத்திற்கு ஒரு புதுமுகத்தை தேடி வந்தார். அப்போது ஒரு திருமண புகைப்படத்தில் ராதிகாவின் புகைப்படத்தையும், அவரின் சிரிப்பையும் பார்த்து இவர்தான் நமது கதாநாயகி என முடிவு செய்தார் பாரதிராஜா.

ராதிகாவின் அம்மாவிடம் அனுமதி கேட்டு ராதிகாவை அப்படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருந்த ராதிகாவுக்கு அப்போது தமிழ் கூட சரியாக பேச வராது. ஆங்கிலமும், சிங்களமும் கலந்து பேசுவார். ஆனாலும், அவரை சொந்த குரலில் பேசி நடிக்க வைத்தார் பாரதிராஜா.

இதையும் படிங்க: கர்ப்பத்தினை கன்பார்ம் செய்த ராதிகா… ஷாக்கான கோபி… கலாய்த்த ராமமூர்த்தி..

அதன்பின் பல படங்களில் கதாநாயகி, சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் ராதிகா. விஜயகாந்துடன் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்தார். அதோடு, ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ் என பலருடனும் நடித்திருக்கிறார். 90களில் கதாநாயகியாக கலக்கியவர் இப்போது அம்மா வேடத்தில் கலக்கி வருகிறார்.

radhika

சினிமா மட்டுமில்லாமல் சீரியலிலும் ஒரு கலக்கி கலக்கியவர்தான் ராதிகா. சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார். இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிந்த நிலையில் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது அரசியலிலும் இறங்கிவிட்டார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டி போட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: ஆஸ்கார் விருதுக்கு வந்த ஆபத்து.. 15 வருஷம் கழிச்சு ரஹ்மான் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டா

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனிடம் ராதிகா திட்டு வாங்கிய சம்பவம் பற்றி அவரே ஊடகம் ஒன்றில் பேசி இருக்கிறார். கமலுடன் சிப்பிக்குள் முத்து, பேர் சொல்லும் பிள்ளை ஆகிய படங்களில் நடித்தேன். எனக்கு அப்போது எனக்கு ரத்தக்கொதிப்பு இருந்தது. திடீரென மயங்கி விழுந்துவிடுவேன். என் முகத்தில் தண்ணீர் தெளித்து என்னை சரிசெய்து சிறிது நேரம் கழித்து படப்பிடிப்பு நடக்கும்.

ஒருநாள் கமல் என்னிடம் வந்து ‘இன்னைக்கு மயக்கம் வந்தது போல நடி. ஷூட்டிங் டிமிக்கி கொடுத்துட்டு கொஞ்சம் வெளிய போற வேலை இருக்கு’ என கேட்டார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். ’எப்படியோ போய் தொலை’ என திட்டிவிட்டு போய்விட்டார். 2 நாட்கள் கழித்து உண்மையிலேயே மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன். தண்ணீர் தெளித்து எழுந்தவுடன் கமலின் முகத்தைத்தான் முதலில் பார்த்தேன். அப்போது ‘சனியன் எப்ப மயக்கம் போட்டு விழுன்னு சொன்னா, இப்ப விழுது பாரு’ என கோபப்பட்டார் கமல்’ என ராதிகா சொல்லி இருந்தார்.

 

Related Articles

Next Story