More
Categories: Cinema News latest news

என் முகத்தில் நானே துப்புவதா.?! உணர்ச்சிவசப்பட்ட ஆண்டவர்.! அதிர்ந்து போனது அரங்கம்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் தற்போதைக்கு இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்றால் அது மிகையாகாது. அந்தளவுக்கு தனது அடுத்தடுத்த படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.

Advertising
Advertising

இவர் இயக்கத்தில் அண்மையில் தான்  விக்ரம் திரைப்படம் ரிலீசானது. உலகநாயகன் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி, பகத் பாசில் , சூர்யா என பலர் நடிக்க வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது வருகிறது.

இந்த படத்த்தின் வெற்றியை தொடர்ந்து விநியோகிஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரையும் அழைத்து கறி விருந்து கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

அப்போது அவர் பேசுகையில் தளபதி 67 பற்றியும் பேசினார். அதாவது, ‘ லோகேஷ் அடுத்து ஒரு படம் இயக்க போகிறார். அதுவும் நம்ம படம் தான். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னிடமும் கேளுங்கள். அது முடிச்சிட்டு விக்ரம் 3 வந்தால் எப்படி இருக்கும்னு பாருங்க. அந்த படத்தை (தளபதி 67) நான் வாழ்த்தாமல் விட்டுவிட்டால் நான் மல்லாக்க படுத்துக்கொண்டு என் முகத்தில் நானே துப்பிக்கொள்வது போல.’ என உணர்ச்சி வசமாக பேசினார் ஆண்டவர் கமல்ஹாசன்.

இதையும் படியுங்களேன் – ரஜினி சார் செஞ்சது.. எனக்கு ரெம்ப அசிங்கமா போய்டிச்சி.! வேதனையில் ஷங்கர் கூறிய சம்பவம்.!

தளபதி 67 பற்றி பேசி வாழ்த்து கூறியதும் அரங்கம் சற்று அதிர்ந்து தான் போனது. ஆண்டவர் அப்படம் பற்றி பேசியுள்ளார் என்று. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க போகும் விஜய் பட அறிவிப்பு விஜய் பிறந்தநாளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Manikandan

Recent Posts