More
Categories: Cinema News latest news

சிம்பு படத்தில் சம்பவம் பண்ண தயாராகும் கமல்!.. அடுத்த விஜய் சேதுபதியாக மாறும் ஆண்டவர்!..

நடிகர் கமல்ஹாசன் ஒருபக்கம் நடிகர் என்றாலும் ஒருபக்கம் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் புதிய திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். கமல் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களை அவர்தான் தயாரித்திருந்தார்,

இடையில் கொஞ்சம் இடைவெளி விட்ட கமல் கடந்த சில வருடங்களாக நிறைய படங்களை தயாரிக்க துவங்கிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான விக்ரம் படமும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று கமலுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: மொத்த ப்ளானையும் மாற்றிய அஜித்!.. ஏக் தம்மில் சம்பவம் பண்ணப்போகும் ஏகே…

இப்படம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே, பல புதிய படங்களை தயாரிக்கும் முயற்சியில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதற்காக சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற இளம் நடிகர்களை கமல் வளைத்து போட்டார். ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒரு புதிய படம் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் சில நாட்கள் நடந்த பின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. ஒருபக்கம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒரு படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னுமும் துவங்கப்படவில்லை.

இந்நிலையில், சிம்பு நடிக்கவுள்ள படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம். கமல் நடித்தால் அப்படத்தின் வியாபாரத்திற்கு இன்னும் பலம் சேரும். சிம்பு ரசிகர்களின் ஆதரவையும் பெறமுடியும் என கணக்குபோடுகிறாராம். பொதுவாக விஜய் சேதுபதிதான் அதிக கேமியோ ரோலில் வருவார். தற்போது கமல்ஹாசனும் அதை செய்ய துவங்கிவிட்டார்.

எல்லாம் ரோலக்ஸ் சூர்யா செஞ்ச சம்பவம் அப்படி!….

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் விவகாரம்!.. கொந்தளித்த விஜய் பட இயக்குநர்… பஞ்சாயத்து முடிச்சி போச்சு கிளம்பு!..

Published by
சிவா

Recent Posts