Connect with us
james

Cinema News

பக்கத்து வீட்டு பெண் காம்பவுண்டில் எகிறி குதிச்சு என்ன பண்ணாரு தெரியுமா?.. ஜேம்ஸ் வசந்தனை வெளுத்து வாங்கும் கனல் கண்ணன்!..

சமீபகாலமாக இளையராஜா ஜேம்ஸ் வசந்தன் பிரச்சினைகள் கொழுந்து விட்டு எரிகின்றன. இது பொதுவான பிரச்சினைகளையும் தாண்டி இப்போது மதம் சார்ந்த பிரச்சினையாக தீப்பிடித்து எரிகின்றன. அமெரிக்காவில் இளையராஜா பேசியதை கண்டித்து ஜேம்ஸ் வசந்தன் அவரை வறுத்தெடுத்து வருகிறார்.

உலகமே கொண்டாடக்கூடிய ஒரு இசை மேதையை ஒற்றை வார்த்தையால் பேசுவதும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் அமெரிக்காவிலேயே மக்கள் ஒன்றும் சொல்லாத போது ஜேம்ஸ் வசந்தன் மட்டும் இப்படி முந்திக்கிட்டு வருவது கண்டிப்பாக இது மதம் சார்ந்த பிரச்சினையை தான் ஏற்படுத்தி வருவதாக கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் இந்த பிரச்சினையை பற்றி ஒரு பேட்டியில் காரசாரமாக பேசியிருக்கிறார்.அதாவது ஜேம்ஸ் வசந்தனை நாதாரிப் பய எனும் தகாத வார்த்தைகளால் திட்டிய கனல் கண்ணன் ‘இவர் ஒழுக்கத்தை பற்றி பேசுகிறாரா? இவரின் ஒழுக்கத்தை நான் சொல்லவா’ என்று சில தகவல்களை பரிமாறினார்.

அதாவது பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணுடன் தகராறு ஏற்பட்டு அந்த காம்பவுண்டில் எகிறி குதித்து சிறுநீர் கழித்தவர் தான் இந்த ஜேம்ஸ் வசந்தன், அதைப் பற்றி போலீஸில் புகாரும் இருக்கிறது, நம்பிக்கை இல்லையென்றால் போலீஸ் ஸ்டேஷன் போய் சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்று கண்டபடி பேசினார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரை மதமாற்றம் செய்ய வைத்து விட்டு அந்த பெண்ணுடன் பிரச்சினை செய்டு விரட்டி அடித்தவர். அதன் பின் தன் மதம் சார்ந்த இன்னொரு பெண்ணை முறை தவறி திருமணம் செய்து கொண்டார் ஜேம்ஸ் வசந்தன் என்று கனல் கண்ணன் காரசாரமாக பேசியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top