Connect with us

Cinema News

என்ன சிறுத்தையை கரடிக்குட்டியா மாத்திட்டாரே!.. கங்குவா வில்லன் சூர்யா பத்தி என்ன சொன்னாரு தெரியுமா?

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் திரைப்படம் 900 கோடி ரூபாய் வசூலை எட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் முதல் பாதியில் வில்லனாக பிருத்விராஜ் பப்லுவும் இரண்டாம் பாதியில் மெயின் வில்லனாக பாபி தியோலும் நடித்திருப்பார்கள்.

பாபி தியோலின் என்ட்ரி பாடலே ஏகப்பட்ட ரீல்ஸ் போடப்பட்டு வேறலெவல் வைரலாகி விட்டது. இந்நிலையில், அவர் தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் என்கிற செய்தியே சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ரேர் வீடியோ.. கிரிக்கெட் விளையாடும் போது டென்ஷனான விஜய்!.. செம கோபக்காரரா இருப்பாரோ தளபதி!..

இந்நிலையில், சமீபத்தில் கங்குவா படக்குழு பற்றியும் அந்த படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா மற்றும் ஹீரோ சூர்யா குறித்து பாபி தியோல் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது.

கங்குவா படத்தின் மொத்த படக்குழுவும் ரொம்பவே சூப்பரான படக்குழு. தென்னிந்திய சினிமாவில் நடித்து வருவது சந்தோஷத்தை தருகிறது. அந்த படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா எனக்கு ஒரு டெடி பியர் போல எப்பவுமே அவரைத்தான் கட்டிப் பிடித்துக் கொள்வேன். அந்த அளவுக்கு செம ஸ்வீட் ஆனவர். படத்தின் ஹீரோ சூர்யா சிறந்த நடிகர் அவரது பர்ஃபார்மன்ஸ் மலைக்க செய்கிறது என பாபி தியோல் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: 40 பிளஸ்லயும் பீச் பியூட்டியா இருக்காரே எதிர்நீச்சல் சீரியல் நடிகை!.. கடலையே சூடாக்கும் கனிகா!..

கங்குவா படத்தில் பாபி தியோல் வில்லனாகவும் திஷா பதானி ஹீரோயினாகவும் நடித்து வரும் நிலையில், பாலிவுட் வசூலை பக்காவாக சூர்யாவின் கங்குவா தட்டித் தூக்கும் என தெரிகிறது. விஜய்யின் லியோ மற்றும் ஜெயிலர் வசூலை கங்குவா முறியடிக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top