More
Categories: Cinema News latest news

மொத்த பேரும் முட்டாளுங்க!.. படம் எடுத்து வீணாப்போனேன்!. புலம்பும் கஞ்சா கருப்பு..

Ganja karuppu: தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் தமிழில் பிதாமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் காமெடிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தனது முதல் படத்திலேயே பெரும்பாலான மக்களை தனது காமெடிகளை ரசிக்க வைத்தவர் கஞ்சா கருப்பு.

இவர் பின் சிவகாசி, பருத்திவீரன் போன்ற பல திரைப்படங்களில் தனது காமெடிகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.  மதுரை, தேனி வட்டார வழக்கில் பேசி மூலம் மக்களை கவர்ந்தார். விமலுடன் இணைந்து நடித்த களவாணி திரைப்படத்தில் இவரின் காமெடிகள் மக்கள் ரசிக்கும்படி இருந்தன.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:சிவாஜிக்காக இயக்குனரும் எடிட்டரும் மோதல்… காரியம் சாதிக்க இப்படி எல்லாமா செய்வாரு?

மேலும் நாடோடிகள், சண்டகோழி போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார். எப்போதும் பிஸியாகவே இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். தற்போது பல திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட பேசப்பட்ட பருத்திவீரன் பிரச்சினையில் அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தார் கஞ்சா கருப்பு.

இவர் என்னதான் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் வாழ்வில் இவர் செய்த மிகப்பெரிய தவறு என்றால் அது இவர் திரைப்பட தயாரிப்பாளராக ஆக முயற்சி செய்ததே ஆகும். 2014 ஆம் ஆண்டு இவர் தயாரிப்பில் வெளியான திரைப்படம்தான் வேல் முருகர் போர்வெல்ஸ். இப்படம் இவருக்கு மிகப்பெரிய தோல்வியை சந்தித்து கொடுத்தது. மேலும் பல இயக்குனர்களும் கஞ்சா கருப்பு படத்தை தயாரித்து மிகப்பெரிய தவறை செய்துவிட்டார் என பல கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இதையும் வாசிங்க:ரஜினி படத்தில் நடிக்க தயாரான கேப்டன்! கொஞ்சம் மிஸ் – இல்லைனா என்ன பேர் கிடைச்சிருக்கும் தெரியுமா?

இதை பற்றி செய்தியாளர் ஒருவர் அவரிடம் கேட்டபோது நான் அப்படத்தை தயாரித்து பெரிய தவறு செய்துவிட்டேன்… படத்தின் இயக்குனர் ஒரு முட்டாள்… அதில் நடித்த நடிகரும் முட்டாள்… இது தெரியாமல் நான் படத்தை தயாரித்துவிட்டேன் என கூறியுள்ளார். மேலும் அப்பட தயாரிப்பின் போது தான் மிகவும் பிஸியாக இருந்ததாகவும் அதனால் தன்னால் அப்படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும் வருத்தத்தில் பேசியுள்ளார்.

மேலும் அப்படத்தின் போது ஃப்லிம்தான் உபயோகித்ததாகவும் அது பாட்டுக்கு ஓடி கொண்டே இருக்கும் எனவும் இயக்குனர் அப்படத்தை மிகவும் அசால்ட்டாக உருவாக்கினார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அடுத்த ஜென்மத்தில் பாம்பாய் பிறந்தாலும் கூட நான் படம் எடுக்க மாட்டேன் எனவும் மேலும் அப்படத்தினால் தான் மிகுந்த கடனில் சிக்கியதாகவும் இன்றுவரை அதை அடைத்து முடிக்கவில்லை எனவும் மிகுந்த வேதனையில் பேசியுள்ளார் கஞ்சா கருப்பு.

இதையும் வாசிங்க:கண்களால் பேசி கதிகலங்க வைக்கும் நடிகை… இந்தப் பாஷைல பேசுறதுன்னா இவருக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி…!

Published by
amutha raja

Recent Posts