ராதாரவி என்னை அடிக்கட்டும்.. ஐ யம் வெயிட்டிங்!. காந்தராஜ் பதிலடி...

சமீபகாலமாக எம்.ஆர்.ராதாரவிக்கும் பிரபல அரசியல் விமர்சகரான காந்தராஜுக்கும் இடையில் ஒரு பனிப்போரே நடந்து வருகிறது. காந்தராஜ் பல பேட்டிகளில் அப்போதைய நடிகர்களை பற்றி பல அனுபவங்களை தன்னுடைய பேட்டிகளின் போது கூறி வருகிறார்.

அதே போல ஒரு பேட்டியிலும் நடிக வேள் எம்.ஆர்.ராதாவை பற்றியும் கூறியிருந்தார். அதாவது காந்தராஜின் சகோதரர் ராஜாராம் ஒரு முன்னாள் எம்பி. அவருக்காக எம்.ஆர்.ராதா வருடத்தில் 300 நாள் ஜெயிலுக்கு போனவராம். அதை பற்றியும் பெருமிதமாக கூறினார் காந்தராஜ்.

radha1

radha1

அதே சமயம் எம்.ஆர்.ராதாவுக்கு மூன்று மனைவிகள் என்றும் வயதான காலத்தில் கூட ஒரு இளம் பெண்ணை திடீரன மணந்து கொண்டார் என்றும் கூறினார். அதுமட்டுமில்லாமல் ராதிகாவை பற்றியும் ராதாரவியை பற்றியும் விமர்சனம் செய்திருந்தார். அதாவது ராதாரவி பிறந்ததே வேஸ்ட் என்றும் எம்.ஆர்.ராதா பெயரை கூட சொல்ல அவருக்கும் ராதிகாவுக்கு உரிமை இல்லை என்றும் காந்தராஜ் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராதாரவி ஒரு பேட்டி கொடுத்தார். அதாவது நான் வேஸ்ட்-னா காந்தராஜுக்கு பிறந்த குழந்தைகளும் வேஸ்ட்தான் என்றும் என் அப்பா ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்தால் அவருக்கு என்ன? வேண்டுமென்றால் நீயும் ஒரு பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கோ என்றும் தாறுமாறா விமர்சனம் செய்தார்.

அதுமட்டுமில்லாமல் அந்த காந்தராஜை இன்னும் நான் நேர்ல பாக்கல, பாத்தா அவ்ளோதான் என்றும் கோபமாக கூறினார். மேலும் நான் பிஜேபியில் இணைந்ததுதான் அவருக்கு பிடிக்காமல் இருந்திருக்கும், அதுதான் அந்த மாதிரி எல்லாம் பேசுகிறார் என்றும் கூறியிருந்தார்.

radha2

radha2

இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் காந்தராஜ். எம்.ஆர்.ராதா மட்டும் ஜெயிலுக்கு போகவில்லை என்றால் என் அண்ணன் மந்திரியாக இருந்திருக்க முடியாது என்றும் அது எம்.ஆர்.ராதாவின் தியாகம் என்றும் அந்த தியாகத்திற்காக ராதாரவி என்னை வந்து அடித்தாலும் நான் வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறினார். ஆனால் நான் பேசுனது இந்தளவு ராதாரவியை பாதிக்கும் என நினைக்க வில்லை என்று கூறிவிட்டு மேலும் அவரது அப்பாவான எம்.ஆர்.ராதா ஒரு திராவிடக் கொள்கையை தன் மூச்சாக கொண்டவர். ஆனால் ராதாரவி பிஜேபியில் இணைந்தது தான் எனக்கு கோபம் என்றும் கூறினார்.

எப்பேற்பட்ட ஒரு லட்சியவாதியின் மகன் இப்படி செய்யலாமா என்று கூறி திராவிடத்தலைவனாக இருந்த ராதாவின் மகன் ராதாரவி என்ன திட்டுவதற்கு ஏன் அடிக்கவும் உரிமை இருக்கிறது, ராதாவிற்காக அதை ஏற்றுக் கொள்கிறேன் என்றும் கூறினார்.

இதையும் படிங்க : கெட்ட பழக்கத்தால் கெட்டு சீரழிந்தேன்; இதுதான் உண்மை: உண்மையை ஒப்புக்கொண்ட ரோபோ சங்கர்

 

Related Articles

Next Story