தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டி என்பது எப்போதும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். அந்த வகையில் நடிகர் ஜீவா மற்றும் கார்த்தி ஆகிய இருவரது திரைப்பயணத்திலும் சில சுவாரசியமான மோதல்கள் நிகழ்ந்துள்ளன.
2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ஜீவா நடித்த ‘என்றென்றும் புன்னகை’ மற்றும் கார்த்தி நடித்த ‘பிரியாணி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மோதிக்கொண்டன.
என்றென்றும் புன்னகை: இயக்குனர் ஐ.அஹமது இயக்கத்தில் ஜீவா, வினய், சந்தானம் மற்றும் த்ரிஷா நடித்த இந்தப் படம் ஒரு பக்கா ‘பீல் குட்’ மூவியாக அமைந்தது. நண்பர்களுக்கு இடையேயான நட்பு, காதல் மற்றும் தந்தை-மகன் உறவை அழகாகப் பேசிய இந்தப் படம், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பெரிய வெற்றியைப் பெற்றது. ஜீவாவின் எதார்த்தமான நடிப்பு இதில் பெரிதும் ரசிக்கப்பட்டது.
பிரியாணி: வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த இந்தப் படம் ஒரு பிளாக் காமெடி திரில்லர் பாணியில் உருவானது. யுவன் சங்கர் ராஜாவின் 100-வது படம் என்ற எதிர்பார்ப்போடு வெளியான இது, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தது. கார்த்தியின் ஸ்டைலான நடிப்பும், நகைச்சுவையும் ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு ஜானர்களில் இருந்ததாலும் என்றென்றும் புன்னகை வசூலில் பிரியாணியை முந்தியது.
இயக்கனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியான போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளியானது அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
ஆனால் எவ்வித எதிர்பார்ப்புமட்டுமின்றி விளம்பரமே இல்லாமல் வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில். ஜீவா நடித்துள்ள இந்த படம் யாரும் எதிர்பார்க்காவகையில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. ஆக இந்த பொங்கலில் பராசக்தி, வா வாத்தியாரை பின்னுக்கு தள்ளி தலைவர் தம்பி தலைமையில் பட்டையை கிளப்பி வருகிறது. இதன் மூலம் கார்த்தியை இரண்டாவது முறையாக வென்றுள்ளார் ஜீவா.
முன்பெல்லாம் சினிமா…
தமிழக வெற்றிக்…
தற்போது புதிதாக…
தற்போது சிவகார்த்திகேயன்…
நடிகை ஜீவாவின்…