கோடி ரூபாய் கொடுத்தாலும், இந்த விஷயத்தை செய்யவே மாட்டேன்.! அடம்பிடிக்கும் கார்த்தி.!

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராகவும், ஒழுக்கமான குடும்பஸ்தராகவும் பார்க்கப்படும் நபர்களில் மிக முக்கியமானவர் சிவக்குமார். இவரது இருமகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்களாக மட்டுமல்லாமல் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாகவும் இருக்கின்றனர்.
சூர்யா ஆரம்பகால திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்திருந்தாலும், அதன் பிறகு முற்றிலுமாக அதனை தவிர்த்து விட்டார். அதேபோல கார்த்தியும் பெரும்பாலும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் அவர் நடிப்பதில்லை என்று கூறலாம்.
இதையும் படியுங்களேன் - அவள் தனியாக சாக போகிறாள்.! நெட்டிசன் கமெண்ட்.! சமந்தா கொடுத்த பக்கா பதிலடி..,
அண்மையில் நகர் கார்த்தி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார். இவர் அண்மையில், இனி புகைபிடிக்கும் காட்சிகளோ அது சம்பந்தமான விளம்பரங்களிலோ எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் நடிக்கப் போவது இல்லை. பெரும்பாலும் அதனை நான் தவிர்க்கிறேன்' என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
அண்மை காலமாகவே பெரும்பாலும் திரைப்பிரபலங்கள் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். பெரும்பாலும் துணி விளம்பரங்களிலோ, நகை கடை எலெக்ட்ரிக் பொருட்கள் விளம்பரங்களிலோ, மட்டுமே நடிக்கின்றனர் மற்றபடி சாப்பிடும் உணவு பொருட்கள் சம்பந்தமான விளம்பரங்களில் நடிப்பதை தவிர்ப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.