அந்த குரல் என் குரல் அல்ல!.. பயில்வான் ரங்கநாதனால் பதறிப்போன சுசித்ராவின் எக்ஸ் கணவர்!..

பயில்வான் ரங்கநாதன் மோசமான முறையில் சாக வேண்டும் என சுசித்ரா சாபமிட்ட நிலையில் அவர் என்ன முனிவரா அதுவே ஒரு பைத்தியம், அந்த கிருமினல் குறித்து அவரது கணவர் கார்த்திக் குமார் சொல்றதைக் கேளுங்க என பயில்வான் ரங்கநாதன் கார்த்திக் குமார் பேசியதாக ஒரு ஆடியோவை வெளியிட்டு இருந்தார்.

அந்த ஆடியோவில் சுசித்ரா திட்டுவது போல கார்த்திக் குமார் குரலில் பேசி இருக்கும் ஆடியோவில் பட்டியலின சமூக மக்கள் குறித்து ரொம்பவே குறைவாக கார்த்திக் குமார் பேசியது போல அந்த ஆடியோவில் உள்ள நிலையில், அதை ஷேர் செய்து நெட்டிசன்கள் பலரும் கார்த்திக் குமாரை உடனடியாக கைது செய்து உள்ளே போடுங்கள் என காவல்துறையினரை டேக் செய்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினி பாட்டுக்கு டியூன் கேட்டா ராம்கி பட டியூனை கொடுத்த இளையராஜா! அப்புறம் என்னாச்சு தெரியுமா?

இந்த விவரத்தை அறிந்த கார்த்திக் குமார் உடனடியாக பதறி அடித்துக் கொண்டு வந்து அந்த வாய்ஸ் என் வாய்ஸ் அல்ல, நான் இவ்வளவு கீழ்த்தரமாக பேச மாட்டேன் என விளக்கம் கொடுத்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், கார்த்திக் குமார் குரல்தான் என பயில்வான் ரங்கநாதன் ஏன் அப்படி ஒரு ஆடியோவை யூடியூப் சேனலுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அதை கிராஸ் வெரிஃபிகேஷன் கூட செய்யாமல் அந்த யூடியூப் சேனல் எப்படி வெளியிடலாம் என்கிற கேள்விகளை தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: கண்ட்ரோல் இருந்தா பாருங்க!… லாங் கவுனில் மொத்த அழகையும் காட்டும் ஷிவானி…

தனுஷ், திரிஷா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கார்த்திக் குமார், ஆண்ட்ரியா, அனிருத், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் குறித்து சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் பல அவதூறு கருத்துக்களை பரப்பிவந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயில்வான் ரங்கநாதன்பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பேட்டியின் போது அந்த ஆடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதில், கார்த்திக் குமார் சொல்வது பொய்யா அல்லது பயில்வான் ரங்கநாதன் வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் கார்த்தி குமாரை கோர்த்து விட பார்க்கிறாரா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுதி வருகின்றனர்.

இதையும் படிங்க: சூர்யா இல்லைனா விக்ரம்! சுதாகொங்கரா போடும் புது திட்டம்.. ‘புறநானூறு’ எல்லாம் பழசுப்பா

 

Related Articles

Next Story