படத்துலதான் ஹீரோ!.. நிஜத்துல ஜீரோ!.. ஸ்ரீலீலாவுக்கு நேர்ந்த கதி.. அலட்சியமாக சென்ற நடிகர்!..

நடிகை ஸ்ரீலீலா தற்போது பாலிவுட்டில் அனுராக் பாசு இயக்கத்தில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பின் போது கார்த்திக் ஆர்யன் மற்றும் ஸ்ரீலீலா இருவரும் கூட்டத்தின் நடுவே நடந்து சென்ற போது ஒரு நபர் ஸ்ரீலீலாவை இழுத்து பிடித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை கவணிக்காமல் கார்த்திக் ஆர்யன் சென்றது ரசிகர்கள் மனதில் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
நடிகை ஸ்ரீலீலா கன்னட மொழியில் வெளியான கிஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், அவர் பாரதே, பை டூ லவ், ஜேம்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தெலுங்கில் பெல்லி சண்டாடி படத்தில் தொடங்கிய அவர் தமாகா, ஸ்கந்தா, பகவந்த் கேசரி, குண்டூர் காரம், ஆதிகேசவா, புஷ்பா 2, ராபின்ஹுட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடனத்தில் பட்டையை கிளப்பி வரும் நடிகை ஸ்ரீலீலாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தமிழில் சிவகாத்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பராசக்தி படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், அவர் நடிப்பில் ஜூனியர், ஆஷிக்கி 3, துபாரி, மாஸ் ஜதரா உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளது.
பாலிவுட் இயக்குநர் அனுராக் பாசு இயக்கத்தில் உருவாகி வரும் ஆஷிக்கி 3 படத்தில் கார்த்திக் ஆர்யானுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வரும் நிலையில் அவர்கள் இருவரும் கூட்டதின் இடையே சென்ற போது ஒரு முகம் தெரியாத நபர் ஸ்ரீலீலாவை மட்டும் பிடித்து இழுத்துள்ளார். ஸ்ரீலீலாவுடன் சென்ற கார்த்திக் ஆர்யான் அவர் பதட்டமடைந்ததைக்கூட கவனிக்காமல் நடந்து சென்றுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை பார்த்த பலருக்கும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், நடிகைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் படத்தில் தான் ஹீரோ, நிஜத்தில் எதுக்குமே பயன்படமாட்டார்கள் என கலாய்த்து வருகின்றனர். அருகில் இருந்த பாதுகாவலர் ஒருவர் தான் ஸ்ரீலீலாவை அந்த இளைஞரிடம் இருந்து மீட்டார். அவர் தான் ரியல் ஹீரோ என பாராட்டி வருகின்றனர்.