Connect with us
ethirneechal

latest news

எதிர்நீச்சல் சீரியல்: ரசிகர்களை ஏமாற்றிய எதிர்நீச்சல்… ஆனா கதிருக்கு ஆப்பு வச்சது என்னமோ சந்தோஷம்தான்…

Ethirneechal Serial: நேற்றைய எபிசோடில் கதிர் குடிபோதையில் நிற்க கரிகாலன் அவருக்கு ஆறுதல் கூறி தெம்பூட்டுகிறார். மேலும் இனி அந்த வீட்டின் பெண்கள் சமைத்து யாரும் சாப்பிட மாட்டோம் என ஈஸ்வரியின் மாமியார் கூறுகிறார். பின் மறுநாள் அந்த வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் சென்று வெளியே சென்று அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர்.

இதையும் வாசிங்க:சேலைக்குனு தனி அபார்ட்மெண்டா? ரகசியங்களை பகிர்ந்து ரசிகர்களின் வயித்தெறிச்சலுக்கு ஆளான ரட்ஷிதா

பின் கதிர் காலையில் போதை தெளிந்து கீழே இறங்கி வருகிறார். ஞானம் வரும் பொழுது அவரின் அம்மா சமையலறையில் இருந்து வெளிவருகிறார். அப்போது அவரிடம் நீங்கள் ஏன் இந்த வேலையெல்லாம் பாக்குறீங்க… என கதிர் ஞானம் கேட்க அங்கிருந்த கரிகாலன் நாமதான அவங்க சமைச்சத சாப்பிட மாட்டொனு சொன்னோம். மேலும் அவங்களுக்கும் நமக்கும் இடையே வார் நடக்கிறது எனவும் கூறுகிறான்.

கதிரின் அம்மா இன்றைய நாள் நமக்கு நல்ல நாள் எனவும் காலையில் ஆதி குணசேகரன் வருவது போல் கனவு கண்டதாகவும் கூறுகிறார். அதற்கு கதிர் ஆமாம்மா அண்ணன் இன்னைக்கு வந்துடுவார் என கூறுகிறார். பின் கரிகாலன் அவரது மாமியாரிடம் எத்தனை மணிக்கு கனவு கண்டீங்க என கேட்க மாமியாரோ 4 மணிக்கு என கூறுகிறார்.

இதையும் வாசிங்க:பாக்கியலட்சுமி: சித்தாவாக பாக்கியா வீட்டிற்குள் நுழைந்த சித்தார்த்… பிரச்னையை சரி செய்ய எழில் எடுத்த முடிவு..!

நல்ல பிரம்ம முகூர்த்தத்தில்தான் கனவு கண்டுள்ளீர்கள்…அதனால் மாமா வந்து விடுவார் என கூறி அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். பின் கதிர் நந்தினியை அழைத்து அண்ணன் வருவார் சமையல் செய்து வைங்க என கூறுகிறார். நந்தினியோ நேத்து அவ்ளோ சமையல் செய்து வச்சோம்…சாப்பிட மாட்டேனு சொல்லிட்டீங்க… இப்போ வந்த சமையல் பண்ண சொல்றீங்க… அதெல்லாம் பண்ண மாட்டோம்.. நாங்க சாப்பிட்டுவிட்டு எல்லாதையும் கழுவி வச்சிட்டோம் என கூறுகிறார்.

கதிரோ நந்தினியை அதட்டி சமையல் செய்ய சொல்கிறார். பின் கதிரின் அம்மா ரேணுகா மற்றும் ஈஸ்வரியை வரசொல்லி அவர்களிடமும் சமையல் செய்யுமாறு கூறுகிறார். பின் அங்கு திடீரென போலிஸ் வர்கின்றனர். அவர்கள் கதிரிடமும் ஞானத்திடமும் ஆதி குணசேகரனை எங்கே என கேட்கின்றனர். அதற்கு கதிரும் ஞானமும் அண்ணன் வெளிலதான் போய்ருக்காரு… உங்களுக்கு இது தேவையிலாத விஷயம் என கூறுகின்றனர். அதற்கு போலிஸார் அவர்கள் இருவரையும் மிரட்டுகின்றனர். இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. ஆனால் இன்றைய ப்ரோமோவில் ஆதி குணசேகரன் வருவது போல் காட்டினர். அது நடைபெறாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

இதையும் வாசிங்க:சிறகடிக்க ஆசை: ரவியை அசிங்கப்படுத்திய மனோஜ்… சப்போர்ட்டுக்கு வந்த முத்து… அம்மா மீது கடுப்பில் ரோகினி!..

google news
Continue Reading

More in latest news

To Top