More
Categories: Cinema News latest news

அடுத்த நாயகி நயன்தாராவா? பயந்து ஒதுங்கி அடங்கிபோன கவின்.!

சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கவின். அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று அதிகளவிலான இளம் ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

அந்த புகழை கொண்டு லிப்ட் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து அந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் ஆகாஷ் வாணி எனும் வெப் தொடர் AHA OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

Advertising
Advertising

இந்த வெப் தொடருக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது லிப்ட் படத்தில் அமிர்தா, அவர் பிகில் படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்களேன் – நண்பர்கள் காலை வாரிவிட்ட விஷால்.! 25 நாள் மொத்தமாக வேஸ்ட்.!

அதேபோல தற்போது ஆகாஷ்வாணி வெப் தொடரில் ரெபா மோனிகா இவரும் பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனால் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பாரா என்று கவினிடம் கேட்கப்பட்டபோது,

கவின் பதறிவிட்டார். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் விருப்பப்படி அப்படி வந்து அமைகிறது. நயன்தாராவை ஏதும் கூறாதீர்கள். ஏனென்றால் அவர்தான் அடுத்த பட தயாரிப்பாளர் என்று பவ்வியமாக தனது பதிலை கூறினார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்க உள்ள ஊர்க்குருவி எனும் திரைப்படத்தில் கவின் தான் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Manikandan

Recent Posts