சும்மா ஜிவ்வுன்னு இழுக்குது!.. தூக்கலான கவர்ச்சியில் அசத்தும் கயல் ஆனந்தி...

kayal anandhi: ஆந்திராவை சேர்ந்த ரக்சிதா தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக ஆனந்தி என பெயரை மாற்றிக்கொண்டார். இவர் முதலில் நடிக்க துவங்கியது தெலுங்கு படங்களில்தான். 4 தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்., தமிழில் பொறியாளன் என்கிற படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

kayal

ஆனால், கயல் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் சண்டி வீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, என் ஆளோட செருப்ப காணோம், மன்னர் வகையறா என பல படங்களிலும் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார்.

kayal

அதன்பின் சில படங்களில் நடித்தாலும் கமலி ஃபிரம் நடுக்காவேரி படம் அவருக்கு மீண்டும் ஒரு நல்லபடமாக வெளிவந்தது. இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் இவர் திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

kayal

அதோடு, அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களையும் சமூகவலைத்தள பக்கங்களில் ஆனந்தி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், வழக்கமாக டீசண்ட்டான உடைகளில் அழகை காட்டும் ஆனந்தி திடீரென சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

kayal

இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் அட இது நம்ம கயல் ஆனந்தியா என வாயை பிளந்து வருகின்றனர். அதோடு, இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kayal

 

Related Articles

Next Story