தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். திருமணத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு படங்கள் வாய்ப்பு இல்லையென்றால் இன்னும் அவருக்குண்டான மாஸ் ரசிகர்கள் மத்தியில் குறையவே இல்லை. கீர்த்தி சுரேஷ் என்றாலே ஆர்ப்பரிக்கும் ரசிகர்களை இன்னும் நாம் பார்க்க முடிகின்றது. சமீபத்தில் கூட சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருதை வென்றார்.
சிவப்பு நிறை சேலையில் மங்களகரமாக அந்த விழாவில் தோன்றியிருந்தார் கீர்த்தி சுரேஷ். விழா முடிந்தும் அதே காஸ்ட்டியூமில்தான் மீண்டும் ஐதராபாத்துக்கு விமானத்தில் சென்றார். இந்த நிலையில் விழாவிற்கு அவர் ரெடியாகி வெளியே வரும் போது ஒரு நபர் மேடம் பூ சூப்பரா இருக்கு என்று கூறினார்.
அதை கேட்டதும் கொஞ்சம் ஷாக் ஆன கீர்த்தி சுரேஷ் என்னது? என்று கேட்டார். அந்த நபர் மறுபடியும் இல்ல மேடம் பூ சூப்பரா இருக்குனு சொன்னேன். அதுக்கு கீர்த்தி சுரேஷ், ‘அடப்பாவி எப்படி ரெடியாகி வந்திருக்கிறேன். பூ சூப்பரா இருக்குனு சொல்ற, போடா’ என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றார்.
உண்மையிலேயே கீர்த்தி சுரேஷ் அந்த சிவப்பு நிற புடவையில் ஸ்டன்னிங்காக இருந்தார். தமிழில் அவர் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/dp_karthik/status/2022920727524184118?s=20
