அதிக சம்பளம் வாங்குவதில் போட்டி போடும் கோலிவுட் இயக்குனர்கள்!. நம்பர் ஒன் இவர்தானாம்!..

பொதுவாக சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் எப்போதுமே நடிகர்கள் மட்டுமே. அதுவும், ரஜினி, கமல், விஜய், அஜித் போல பெரிய நடிகர்களுக்கு சம்பளம் 100 கோடிக்கும் மேல் கொடுக்கப்படுகிறது. விஜயெல்லாம் 200 கோடியை தொட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அஜித் இப்போதுதான் 100 கோடியை தாண்டி இருக்கிறார்.

பெரிய ஹீரோக்களுக்கு பின் அதிக சம்பளம் வாங்குவது பெரிய இயக்குனர்கள்தான். அதாவது, ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள். அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் வரிசையில் பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து ஷங்கர்தான். ஆனால், அவருக்கு பின் அவரின் உதவியாளர் அட்லீ, இயக்குனர் நெல்சன், லோகேஷ் கனகராஜ் என இப்போது பலரும் வந்துவிட்டனர்.

இதையும் படிங்க: நிவேதா பெத்துராஜ் கார் டிக்கியில என்ன இருந்துச்சு தெரியுமா?.. போலீஸ் உடன் வாக்குவாதம் செய்தது ஏன்?

இந்நிலையில், கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பற்றி பார்ப்போம். கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக மாறியவர் நெல்சன். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்த படம் 100 கோடியை வசூல் செய்தது. எனவே, இவரின் சம்பளம் தாறுமாறாக எகிறியது. ஜெயிலர் படத்திற்கு 20 கோடி சம்பளம் வாங்கினார். அப்படம் 700 கோடிக்கும் மேல் வசூல் செய்யவே இப்போது இவரின் அடுத்த படத்துக்கு ரூ.50 கோடியை சம்பளமாக கொடுக்க முன்வந்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அனேகமாக, அந்த படம் ஜெயிலர் 2-வாக இருக்கலாம்.

விஜயை வைத்து 3 படங்களை இயக்கிய அட்லி பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். ஷாருக்கான் ரசிகர்களை மிகவும் கவர்ந்த இந்த திரைப்படம் உலகமெங்கும் சேர்த்து 1200 கோடியை வசூல் செய்ததால் கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் முன்னணி நடிகர்களின் பார்வை அட்லி பக்கம் திரும்பி இருக்கிறது.

அட்லி இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ புஷ்பா புகழ் அல்லு அர்ஜூனாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த படத்திற்கு 60 கோடி சம்பளம் கேட்டிருப்பதாகவும், அதோடு, லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கேட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் முதலிடம் இவருக்குத்தான்.

அடுத்து, குறுகிய காலத்திலேயே விஜய், ரஜினி ஆகியோரை வைத்து படமெடுக்கும் இயக்குனராக மாறி இருக்கிறார். இவரின் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இவரினி சம்பளம் ஏறிக்கொண்டேதான் போகிறது. ரஜினியை வைத்து எடுக்கவுள்ள கூலி படத்திற்கு அவரின் சம்பளம் ரூ.60 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story