Connect with us

Cinema News

கவுன்சிலருடன் ஒரு போட்டோக்கே யோசித்த திரிஷா… கூவத்தூர் சம்பவத்துக்கு இந்த லாஜிக் சரியாக இருக்கே?

Trisha: அரசியல் பிரமுகர் ஒருவர் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பரப்பிய செய்திதான் தற்போதைய சமூக வலைதளத்தின் பரபரப்புக்கான காரணமாகி இருக்கிறது.  இந்த செய்தி உண்மையா? பொய்யா? என யோசிக்கும் முன்னர்  திரிஷாவின் அடிப்படை குணங்கள் சிலவற்றை பிரபல திரைவிமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் 2000களிலிருந்து நடிகையாக வலம் வருபவர் திரிஷா.  அஜித், விஜய், சூர்யா என முன்னணி பிரபலங்களுடன் ஜோடி போட்டவர்.  ஒரு கட்டத்தில் கோலிவுட் கனவு கன்னியாக வலம் வந்த திரிஷா இடையில் தனது மார்க்கெட்டில் மிகப்பெரிய இழப்பை சந்தித்தார்.  இருந்தும் சில படங்களில் தனி நாயகியாக நடித்து வந்தார்.

இதையும் படிங்க: ஜெமினி கணேசன் வந்தாதான் நான் நடிப்பேன்!.. படப்பிடிப்பில் அடம்பிடித்த சாவித்ரி!.. இப்படி ஒரு லவ்வா!..

அதைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருந்தார். படம் நல்ல ரீச்சை கொடுக்க அம்மணி மார்க்கெட்டும் உச்சத்திற்கு வந்து விட்டது. சமீபத்தில் விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி, தக் லைபில் கமலுடன் என வரிசையாக நடித்து வருகிறார்.

இந்நிலையில்தான் அரசியல் பிரமுகர் ஒருவர் திரிஷாவிற்கு ஒரு நாளைக்கு 25 லட்சம் கொடுத்ததாக அவதூறான செய்தியை பரப்பினார்.  இந்த பிரச்சனை குறித்தும் திரிஷா குறித்தும் அந்தணன் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். தி ரோட் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு கவுன்சிலர் திரிஷாவுடன் புகைப்படம் எடுக்க விரும்பி இருக்கிறார்.

இது குறித்து இயக்குனருடன் பேச அவரும் புகைப்படம் தானே எடுத்துக் கொள்ளலாம் என ஒரு நாளைக்கு  ஷூட்டிங்கிற்கு வரச் சொல்லி இருக்கிறார். அந்த பிரமுகரும்  சிலரை அழைத்துக்கொண்டு திரிசாவுடன் புகைப்படம் எடுக்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று விட்டாராம்.  ஆனால் காலையில் வந்து நின்றவரை திரும்பி கூட திரிஷா பார்க்கவே இல்லை.  மாலை சூட்டிங் முடியும் நேரமும் வந்துவிட அவர் அங்கே நின்று கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: பாரதி கண்ணம்மா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அவர்தான்!.. பல வருடங்கள் கழித்து சேரன் சொன்ன தகவல்..

திரிஷா அவரிடம் செல்லவே இல்லை.  இயக்குனரும் சங்கடப்பட்டு கொண்டே திரிஷாவிடம் போய் அவர் ஒரு புகைப்படம் எடுக்க விரும்புகிறார் என கேட்கிறாராம்.  ஆனால் திரிஷா நான் அரசியல் பிரமுகர்களுடன் புகைப்படம்  எடுத்துக்கொள்ளவே மாட்டேன்.  அதை நான் ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்கிறேன்.  இப்போது எடுத்துக் கொள்வது பின்னால் எனது கேரியரில் மிகப்பெரிய பிரச்சினையை கூட உண்டு செய்யும் என்பதால் அதற்கு நோ சொல்லிவிட்டாராம்.

அது மட்டுமல்லாமல், பொதுவாக நடிகைகள் ஒரு சம்பளம் பேசி முடித்த பின்னர் குறிப்பிட்ட கால்ஷீட் நாட்களை விட அதிக நாட்கள் எடுக்கும் போது அதற்கும் ஒரு நாளைக்கு என சம்பளத்தை பேசி வாங்கி கொள்வார்கள்.  ஆனால் திரிஷா தி ரோட் திரைப்படத்தில் நடித்தபோது அதிகமாக பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார்.  அவர் நினைத்திருந்தால் ஒரு நாளைக்கு 5 லட்சம் என வைத்துக் கொண்டால் கூட 50 லட்சத்தை எளிதாக வாங்கி இருக்க முடியும்.

ஆனால் அவர் அந்த பத்து நாட்களைக் கூட இலவசமாக நடித்துக் கொடுத்தாராம்.  அவரா வெறும் 25 லட்சத்திற்கு அதுவும் அத்தனை பிரமுகர்கள் இருக்கும் கூவத்தூர் போன்ற பகுதிக்கு சென்றிருப்பார்.  காழ்புணர்ச்சிக்காக ஒரு நடிகையை அவதூறாக பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது.  இது குறித்து நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது எனவும் ரசிகர்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

இதையும் படிங்க: பாலசந்தருக்கு ரஜினி கமல் செய்யாததை நான் செஞ்சிருக்கேன்! வாழ்நாள் பாக்கியமாக கருதிய நடிகர்

google news
Continue Reading

More in Cinema News

To Top