கேப்டன் சமாதிக்கு போனதும் குட்டி விஜயகாந்தாவே மாறிட்டாரே பாலா!.. வீடியோ பாருங்க...

கேபிஒய் பாலாவுக்கு 15 ஆம் ஆண்டு நார்வே சினிமா விருது விழா நிகழ்ச்சியில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வாங்கிய பாலா சென்னைக்கு வந்ததும் அதை எடுத்துக்கொண்டு நேராக விஜயகாந்த் சமாதியில் வைத்து விழுந்து கும்பிட்டு அதை எடுத்துக் கொள்ளும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யார் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா தொடர்ந்து மக்களுக்கு தன்னிடம் இருக்கும் பணத்தை செலவு செய்து உதவிகளை செய்து வருகிறார். அவரது தொண்டு உள்ளத்தை பார்த்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து அவருக்கு நிகழ்ச்சிகளும் புதிதாக சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: குழந்தைகளை வளர்ப்பதில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா? டிப்ஸ்களை அள்ளி வீசிய சின்னக் கலைவாரணர்!..

ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சமீபத்தில் பாலா பல உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில், புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் விருது பாலாவுக்கு கொடுக்கப்பட்டது. அந்த விருதை வாங்கிக் கொண்டு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விஜயகாந்தின் சமாதிக்கு சென்ற பாலா சமாதியின் முன்பு அந்த விருதை வைத்து விழுந்து கும்பிட்ட காட்சிகளை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், அந்த இடத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த வசதி இல்லை என ஒரு அம்மா கண்ணீருடன் வந்து நிற்க தனது பாக்கெட்டில் இருந்த அனைத்து ₹500 நோட்டுக்களையும் எடுத்து அப்படியே அவருக்கு கொடுத்து பீஸ் கட்டிடுங்க எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தாமரையை மலர வைக்கும் முயற்சியா இது? தயாராகப் போகும் அண்ணாமலை பயோபிக்.. ஹீரோ யார் தெரியுமா?

கையில் உள்ள மொத்த பணத்தையும் அப்படியே கொடுத்துட்டீங்களே என அம்மா உருக்கத்துடன் கூறிய நிலையில், படிக்கத் தானே கேக்குறீங்க எடுத்துக்கோங்க.. எப்படி அமைதி பாருங்க.. கேப்டன் கடவுளாகவே ஆகிட்டாரு என பாலா பேசியுள்ள காட்சிகள் ரசிகர்களை புல்லரிக்கச் செய்துள்ளது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C6eAmm4xj2I/

 

Related Articles

Next Story