நயன்தாராவை நடிக்க வச்சதுதான் நான் பண்ண ஒரே தப்பு! தனுஷ் பட இயக்குனர் ஆதங்கம்

Actress Nayanthara: தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என தன்னுடைய ஸ்டைலாலும் நடிப்பாலும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர். ஒரு ஹோம்லியான லுக்கில் இந்த தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்த நயன்தாரா இப்போது ஒரு ஸ்டைலிஷ் ஆன நடிகையாக மாறி இருக்கிறார்.

ஐயா மற்றும் சந்திரமுகி போன்ற படங்களுக்கும் இப்போது வெளியாகும் நயன்தாராவின் படங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்கும் போது அவர் எந்த அளவுக்கு நடிப்பிலும் சரி தன்னுடைய தோற்றத்திலும் சரி அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டி இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரியும். தற்போது நயன்தாராவை பற்றிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

2014 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் அனாமிகா. தமிழ் மற்றும் தெலுகு ஆகிய இரு மொழிகளிலும் வெளியான இந்த படத்தை சேகர் கமுலா என்ற இயக்குனர் இயக்கியிருந்தார். அதுதான் தமிழில் அவர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படமாகும். அனாமிகா திரைப்படம் ஹிந்தியில் வெளியான ‘காஹனி’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இதையும் படிங்க: 50 கோடினு சொன்னாங்க! கடைசில சம்பள விஷயத்தில் இப்படி ஆகிப்போச்சே.. ராயன் படத்துக்கு இப்படியா?

இந்தி பதிப்பில் நயன்தாரா நடித்த கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருந்தார். ஹிந்தியில் ஏற்கனவே வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்ட சேகர் கமுலாவுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது .ஹிந்தியில் வெற்றி பெற்ற அளவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் அந்த அளவு எதிர்பார்ப்பை பெறவில்லை.

இதைப்பற்றி ஒரு பேட்டியில் கூறிய சேகர் கமுலா ‘அந்த படத்தை எடுக்கும் போது நிர்பையா பிரச்சனை நாட்டையே உலுக்கியிருந்தது. அந்த நேரத்தில் ஒரு ஆர்வத்தில் பெண்களை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அனாமிகா திரைப்படத்தை எடுத்து விட்டேன். அதில் நயன்தாரா போன்ற பெரிய பீக்கில் இருக்கும் நடிகை நடித்தால் மக்களிடம் ஒரு நல்ல வரவேற்பை எளிதாக பெற்றுவிடலாம் என நினைத்து நயன்தாராவை இந்த படத்தில் நடிக்க வைத்தேன்.

இதையும் படிங்க: கமல் படத்துல நடிச்சதுக்கு இதுதான் காரணம்… ஆனா பெரிய இழப்பு ஆகிடுச்சு… கபிலன் ஃபீலிங்

ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது நயன்தாராவை அந்த படத்தில் நடிக்க வைத்தது தான் ஒரு தவறான விஷயம்’ என அந்த பேட்டியில் சேகர் கமுலா கூறியிருக்கிறார். இந்த கதை தென்னாப்பிரிக்கா ரசிகர்களிடம் அந்த அளவு எளிதாக போய் சென்றடையவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சேகர் கமுலா தற்போது தனுஷை வைத்து குபேரா என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஸ்மிகா போன்ற நடிகர்களும் நடித்து வருகின்றனர். அதேபோல் நயன்தாராவும் டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் டாக்சிக் என்ற திரைப்படத்தில் கன்னட நடிகர் யாஷுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ரஜினி படத்துக்கு மியூசிக் போட வந்த வாய்ப்பு!.. எல்லாமே போச்சி!.. இசையமைப்பாளர் ஃபீலிங்!..

அனாமிகா படத்திற்கு பிறகு சேகர் கமுலா அதன் பிறகு தமிழில் வேறெந்த படத்தையும் இயக்கவில்லை. இப்பொழுதுதான் குபேரா என்ற பெயரில் தெலுங்கில் ஒரு படத்தை எடுத்து வருகிறார்.

 

Related Articles

Next Story