More
Categories: Cinema History Cinema News latest news

கமல் ஒரே நேரத்தில் 6 நடிகைகளை காதலித்தார்!.. எப்படி சமாளிச்சாருன்னு தெரியல!.. நடிகை பகிர்ந்த ரகசியம்…

திரையுலகில் காதல் மன்னனாக வலம் வந்தவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் திரைப்படம் எனில் அதில் சொட்ட சொட்ட காதல் காட்சிகள் இருக்கும். இதனாலேயே அவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தனர். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் கமல்ஹாசன் காதல் மன்னன்தான். அவரின் வாழ்க்கை எல்லோருக்கும் தெரிந்த ஒரு திறந்த புத்தகமாகாத்தான் இருக்கிறது. சினிமாவில் கமல் காதலித்த நடிகைகளும் ஏராளம். கமலை காதலித்த நடிகைகளும் ஏராளம்.

சிறு வயது முதலே எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் சிறுமியாக நடித்தவரும், கமலுடன் திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை குட்டி பத்மினி கமலின் காதல் வாழ்க்கையை பற்றி சமீபத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

Advertising
Advertising

நடிகை ஸ்ரீவித்யா கமலை மிகவும் நேசித்தார். கமலுடன் பல படங்களில் அவர் நடித்துள்ளார். அப்போது அவருக்கு கமல் மீது காதல் ஏற்பட்டது. கமலை பிடிக்காத நடிகைகளே இல்லை என்கிற அளவுக்கு அப்போது அவர் ஹேண்ட்சம்மாக இருப்பார். நான் கமலுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அப்போது நடிகை வாணி கணபதியை கமல் காதலித்து வந்தார். விமான நிலையத்தில் வாணிக்கு கமல் கிஃப்ட் வாங்குவதை பார்த்திருக்கிறேன். அதேபோல், அவர் ஹிந்தி நடிகை ரேகாவையும் காதலித்து வந்ததாக சிலர் கூறினர். எனவே, கமல் மீது வைத்துள்ள காதலை விட்டு விடுங்கள் என ஸ்ரீவித்யாவிடம் கூறினேன். ஆனால், அவர் கேட்கவில்லை.

கமல் ஒரே நேரத்தில் ஆறு நடிகைகளை காதலித்தார். ஸ்ரீவித்யா, ஹிந்தி நடிகை ரேகா, ஜெய சுதா, வாணி கணபதி, இது இல்லாமல் இன்னும் 2 நடிகைகள் இருந்தனர். அத்தனை நடிகைகளையும் கமல் எப்படி சமாளித்தார் என தெரியவில்லை. அதனால்தான் அவருக்கு சகலகலா வல்லவன் என பெயர் வந்தததா என தெரியவில்லை.

வாணி கணபதியை கமல் திருமணம் செய்து கொண்டது ஸ்ரீவித்யாவை மிகவும் பாதித்தது. அதிலிருந்து மீளவே அவருக்கு சில வருடங்கள் ஆனது. அதன்பின் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரையும் பிரிந்தார். அதன்பின் சினிமாவில் நடித்து வந்த ஸ்ரீவித்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் யாரையும் பார்க்க விரும்பாத ஸ்ரீவித்யா கமலை மட்டுமே சந்திக்க ஆசைப்பட்டு அவரை சந்தித்தார். 2006ம் வருடம் கேரளாவில் ஒரு ஆனாதை போல் இறந்துபோனார்’ என குட்டிபத்மினி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts