சென்னை வண்ணாரப்பேட்டை மாடல் லைன் பகுதியில் வசித்து வருபவர் ரவி(68). இவர் அதிமுக வட்டத் தலைவர் பதவியில் உள்ளார். இவர் அதே பகுதியில் வசித்தும் கூலித்தொழிலாளி இந்திராணியின் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடன் அவ்வப்போட்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதை அச்சிறுமி தனது தயாரிடம் தெரிவிக்க 1089 உதவி எண்ணில் சிறுமியின் தாய் தொடர்பு கொண்டு கூறினார். இந்த தகவல் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க, போலீசார் ரவியை கைது செய்தனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது. மேலும், ஆபாச வீடியோவை காட்டி அவர் இந்த கொடூரச் செயலை அவர் செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…
நலன் குமாரசாமி…