More

18 வருட திரை வாழ்க்கை… அந்த ஒரு படம் மட்டும் நயன்தாரவுக்கு பிடிக்கவே பிடிக்காதாம்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் கதாநாயகியாக நடித்த கொலையுதிர்க் காலம் திரைப்படத்தின் அதிருப்தியில் இருந்தாராம்.

Advertising
Advertising

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானகொலையுதிர் காலம்திரைப்படத்தின் கதையைக் கூட கேட்காமல் நடிக்க ஆரம்பித்தார். அந்த அளவுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை நம்பினார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்களால் அந்த படத்தில் ஏனோ தானோவென்றுதான் நடித்தார். ஒரு கட்டத்தில் அந்த படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாக அறிவிகக்ப்பட்டது.

ஆனால் திடிரென அந்த படத்தை ரிலிஸ் செய்தனர். இத்தனைக்கும் படம் முழுமையாக படம் பிடிக்கப்பட கூட இல்லை. படத்தின் பப்ளிசிட்டியிலும் நயன்தாரா கலந்துகொள்ளவில்லை.  தனது 18 வருட சினிமா அனுபவத்தில் மிக தனக்குப் பிடிக்காத படம் என்றால் அது இந்த படம்தான் என கூறி அப்போது வருத்தப்பட்டாராம் நயன்தாரா.

Published by
adminram