5 கோடி சொத்தும் போச்சு... பொண்டாட்டியும் போச்சு.. போலீஸ் எஸ்.ஐ மீது புகார்...
சென்னை கே.கே.நகரில் வசித்து வருபவர் நர்மதா. இவரின் கணவன் ஜனார்த்தனன் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், திருநின்றவூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. ராஜேஷுக்கும் நர்மதாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜனார்த்தனன் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் பணத்தை நர்மதா ராஜேஷுக்கு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
கடந்த மே மாதம் சென்னைக்கு வந்த ஜனார்த்தனன் இதை கண்டுபிடித்தார். அதோடு, ஒரு நாள் அவர்கள் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்தார். அப்போது, ஜனார்த்ததனுக்கு எஸ்.ஐ. ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
எனவே, சென்னை போலீஷ் கமிஷனரிடம் ஜனார்த்தனன் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளார். அதோடு, எஸ்.ஐ. ராஜேஷ் தன்னை தாக்கியதோடு, குழந்தைகள் பெயரில் வாங்கிய ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் ராஜேஷ் அபகரித்துக்கொண்டார் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.