More

வெளிநாட்டிலிருந்து வந்த 54 ஆயிரம் பேர்… சுற்றி வளைக்கும் அதிகாரிகள்

மற்ற நாட்டிலிருந்து விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்தவர்கள் மூலமாகவே கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களிலிருந்து சில நாட்களுக்கு முன்பு தமிழகம் திரும்பி சிலரின் மூலமாகவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியது. கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பிருந்து அனைத்து விமான நிலையங்களிலிருந்து வந்தவர்களும் பரிசோதனை செய்யப்பட்டபின்பே வெளியே அனுமதிக்கப்பட்டனர்.

Advertising
Advertising

ஆனால், பரிசோதனையை துவங்கும் முன்னரே பலரும் மக்களோடு மக்களாக கலந்து கொண்டனர். எனவே, விமானம் மூலம் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 54 ஆயிரம் பேரின் பட்டியலை மத்திய அரசு தமிழக அரசிடம் சமர்பித்துள்ளது. அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Published by
adminram

Recent Posts