More

75 வயது தாத்தா… 45 வயது அப்பா… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….

அகமதாபாத் சூரத் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு நிலேஷ் என்பவர் ஆதரவு கொடுத்துள்ளார். எனவே, அப்பெண் தனது 15 வயது மகளுடன் நிலேஷுடன் தங்கியுள்ளார். அந்த வீட்டில் நிலேஷின் தந்தை முகேஷும்(75) தங்கியிருந்தார்.

Advertising
Advertising

இந்நிலையில், கடந்த 3 வருடங்களாக சிறுமியை முகேஷ் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் ஒரு முறை சிறுமி கர்ப்பமாகியுள்ளார். எனவே, கர்ப்ப கலைப்பு மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார். இந்த விவகாரம் முகேஷுக்கு தெரியவர அவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய துவங்கியுள்ளார். சிறுமியின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் சிறுமி இதுபற்றி கூறியும் அவரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. கடந்த அக்டோபர் மாதம் அவர் இறந்துபோனார்.

இந்த விவகாரம் தற்போது காவல் நிலையம் வரை சென்றுள்ளது. நிலேஷை போலீசார் கைது செய்துள்ளனர். அவரின் முகேஷ் தலைமறைவாகி விட்டார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Published by
adminram