More

சிவக்குமாராவது தட்டி விட்டார். சல்மான்கான் என்ன செஞ்சார் பாருங்க!…(வீடியோ)

சினிமா பிரபலங்கள் விமான நிலையம், சினிமா விழாக்கள் நடக்கும் இடங்கள் ஆகிய  இடங்களுக்கு வரும் போது ரசிகர்கள் அனுமதியின்று அவர்கள் அருகில் சென்று செல்பி எடுப்பது தொடர்கதையாகி வருகிறது. சில பிரபலங்கள் பொறுமையாக நடந்து கொண்டாலும், சிலர் கோபப்படுவதும் உண்டு. அப்படி அவர்கள் கோபமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு.

Advertising
Advertising

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் ஒரு திருமண விழாவில் ரசிகரின் செல்போனை தட்டி விட்டு சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் கிண்டலடிக்கப்பட்டது.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் சமீபத்தில் ஒரு படப்பிடிப்பிற்காக கோவா சென்றிருந்தார். கோவா விமான நிலையத்தில் ஒருவர் சல்மான்கான் முன்னே சென்று செல்பி எடுத்தார். அப்போது, அவரின் செல்போனை சல்மான்கான் தட்டிப்பறித்து கையோடு எடுத்து சென்றுவிட்டார். அந்த நபர் விமான நிலையத்தின் ஊழியர் எனக்கூறப்படுகிறது. இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts